ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைகளில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரின் மத்திய சிறை மற்றும் ஜம்முவின் கோட் பால்வால் சிறை போன்ற உயர் பாதுகாப்பு வசதிகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள கைதிகள் பலரும் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததால் கைதானவர்கள். அதாவது பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவி வரும் தீவிரவாதிகளுக்கு தங்குமிடம், போக்குவரத்து போன்ற உதவிகளை செய்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தால் கைதானவர்கள்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உளவுத்துறை புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2023 வரை ஜம்மு காஷ்மீர் சிறைகளின் பாதுகாப்பை சிஆர்பிஎப்தான் கவனித்து வந்தது. அந்த ஆண்டு முதல் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஏற்றது.
தற்போதைய புதிய எச்சரிக்கையைத் தொடர்ந்து சிஐஎஸ்எப் மூத்த அதிகாரி, ஸ்ரீநகரில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தார். தெற்கு காஷ்மீரின் காடுகளில் இன்னும் அதிகமான பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில், சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன. எந்தவித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!
ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!
TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!
அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
{{comments.comment}}