சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ள தலைவெட்டியான் பாளையம் சீரிஸ் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ்தான் தலைவெட்டியான் பாளையம். பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்தாலும் கூட சீரிஸ் முழுக்க முழுக்க காமெடி தான் களை கட்டியுள்ளதாம்.

தி வைரல் பீவர் நிறுவனம் தயாரித்துள்ள தலைவெட்டியான் பாளையம் வெப் சீரியஸை இயக்குனர் நாகா இயக்கியுள்ளார். குடும்ப பொழுதுபோக்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த சீரிஸில் அபிஷேக்குமார், சேத்தன், கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த தலைவெட்டியான் பாளையம் காமெடியை மையமாகக் கொண்டு 8 எபிசோடுகளாக உருவாகியுள்ளது.
ஒரு பெரிய நகரத்தை சேர்ந்த ஒரு இளைஞன் தலை வெட்டியான் பாளையம் என்ற தொலைதூர கிராமத்தில் வேலைக்காக வருகிறான். அறிமுகம் இல்லாத சூழலின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை சொல்கிறது. வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பிரைம் வீடியோவில் தலை வெட்டியான் பாளையம் வெப் சீரிஸ் பிரீமியர் செய்யப்படுகிறது. இது தமிழ் மற்றும் ஆங்கில சப் டைட்டில்களுடன் திரையிடப்பட உள்ளது. இந்த சீரிஸின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இந்த சீரிஸ் முழுவதும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
.jpg)
இந்த நிலையில் ஜிபி முத்துவும் அபிஷேக்குமாரும் இந்த சீரியஸில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று மையப்படுத்தி ஒரு அட்டகாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் தலை வெட்டியான் பாளைத்தின் டார்லிங் ஆக மாற ஐந்து அருமையான ஐடியாக்களை அபிஷேக் குமாரிடம் கூறுகிறார்.
1.எப்போதும் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது.
2.சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்த கிராமத்தில் யாரும் புதியவர் இல்லை.
3.இயல்பாகப் பழக வேண்டும் அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும்.
4.பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இரு
5 முக்கியமாக பேய்மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இரு.
.jpg)
இதையெல்லாம் ஒழுங்காக ஃபாலோ பண்ணினால் தலை வெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்கு பிடித்தவனாக இருப்பாய் என கூறியுள்ளார் ஜிபி முத்து.
சீரிஸ் வரட்டும்.. நாமளும் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}