ஐரோப்பாவில்.. சட்ட விரோதமாக குடியேற முயன்ற பாகிஸ்தானியர்கள்.. சென்ற படகு கவிழ்ந்து.. 16 பேர் பலி

Feb 12, 2025,11:04 AM IST

சவாயா சிட்டி, லிபியா: சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறுவதற்காக  பாகிஸ்தானியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த மாதம் ஜனவரி 29ஆம் தேதி ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகு மொராக்கோவின்  துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.




தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் குடியேறுவது தொடர்கதையாகவே நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. 


மீண்டும் ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் கூட்டமாக படகில் சென்று உள்ளனர். அப்போது பாகிஸ்தானியர்கள் சென்ற படகு லிபியா கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 37 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்