சவாயா சிட்டி, லிபியா: சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறுவதற்காக பாகிஸ்தானியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஜனவரி 29ஆம் தேதி ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகு மொராக்கோவின் துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் குடியேறுவது தொடர்கதையாகவே நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
மீண்டும் ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் கூட்டமாக படகில் சென்று உள்ளனர். அப்போது பாகிஸ்தானியர்கள் சென்ற படகு லிபியா கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 37 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
{{comments.comment}}