ஐரோப்பாவில்.. சட்ட விரோதமாக குடியேற முயன்ற பாகிஸ்தானியர்கள்.. சென்ற படகு கவிழ்ந்து.. 16 பேர் பலி

Feb 12, 2025,11:04 AM IST

சவாயா சிட்டி, லிபியா: சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறுவதற்காக  பாகிஸ்தானியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த மாதம் ஜனவரி 29ஆம் தேதி ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகு மொராக்கோவின்  துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.




தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் குடியேறுவது தொடர்கதையாகவே நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. 


மீண்டும் ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் கூட்டமாக படகில் சென்று உள்ளனர். அப்போது பாகிஸ்தானியர்கள் சென்ற படகு லிபியா கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 37 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

news

எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)

news

2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்