சவாயா சிட்டி, லிபியா: சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறுவதற்காக பாகிஸ்தானியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஜனவரி 29ஆம் தேதி ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகு மொராக்கோவின் துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் குடியேறுவது தொடர்கதையாகவே நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
மீண்டும் ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் கூட்டமாக படகில் சென்று உள்ளனர். அப்போது பாகிஸ்தானியர்கள் சென்ற படகு லிபியா கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 37 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}