அந்திக் கருக்கலில் ஒரு காவியம்

Apr 29, 2026,04:46 PM IST

- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா


பொன்மாலைப் பொழுதில்...

மேற்கில் ஆதவனும், கிழக்கில் நிலவும் 

நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன!

இரவும் பகலும் கைகோர்க்கும்

அந்த இனிய சந்திப்பில் -

வெப்பமும் ஒளியும் சங்கமித்தன!




அனலும் குளிர்ச்சியும் அரவணைக்க,

வானம் ஒரு ஓவியமானது!

அந்த இயற்கையின் தூரிகையில் -

என் மனதில் ஒரு காவியம் பிறந்தது!


ஒரே வானில், ஒரே நேரத்தில்

இரு சுடர்களைக் கண்டபோது -

இயற்கையின் பேரழகு வியக்க வைத்தது!


மனித அறிவுக்கு எட்டாத ரகசியமாய்

இப்பிரபஞ்சம் நம்மை இயக்குகிறது.

இங்கே...

ஆன்மீகம் வெல்கிறதா? அல்லது அறிவியல் வெல்கிறதா?

விடை தேடினால்...

அது அவரவர் மனசாட்சி சொல்லும்

உன்னதமான ரகசியம்!


(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்