அந்திக் கருக்கலில் ஒரு காவியம்

Apr 29, 2026,04:46 PM IST

- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா


பொன்மாலைப் பொழுதில்...

மேற்கில் ஆதவனும், கிழக்கில் நிலவும் 

நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன!

இரவும் பகலும் கைகோர்க்கும்

அந்த இனிய சந்திப்பில் -

வெப்பமும் ஒளியும் சங்கமித்தன!




அனலும் குளிர்ச்சியும் அரவணைக்க,

வானம் ஒரு ஓவியமானது!

அந்த இயற்கையின் தூரிகையில் -

என் மனதில் ஒரு காவியம் பிறந்தது!


ஒரே வானில், ஒரே நேரத்தில்

இரு சுடர்களைக் கண்டபோது -

இயற்கையின் பேரழகு வியக்க வைத்தது!


மனித அறிவுக்கு எட்டாத ரகசியமாய்

இப்பிரபஞ்சம் நம்மை இயக்குகிறது.

இங்கே...

ஆன்மீகம் வெல்கிறதா? அல்லது அறிவியல் வெல்கிறதா?

விடை தேடினால்...

அது அவரவர் மனசாட்சி சொல்லும்

உன்னதமான ரகசியம்!


(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்