2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Jan 30, 2024,06:04 PM IST

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இன்று அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். 


நாடாளுமன்ற லோக்சபாவில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போதைய மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது.


ஒவ்வொரு வருடமும் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றி தொடங்கி வைப்பார். அந்த வகையில் நாளை தொடங்கவுள்ள கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார்.  இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 




கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தருவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. 


இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் அறிவிப்புகள் இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், தேர்தல் காலம் என்பதால் ஏதாவது முக்கியமான அறிவிப்புக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


பலத்த பாதுகாப்பு


கடந்த மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது நாடாளுமன்ற வளாகத்திற்குள் சில இளைஞர்கள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினர். லோக்சபாவுக்குள் இரண்டு பேர் புகுந்து வண்ணக் குண்டுகளை வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.


நாடாளுமன்றத்தில் நடந்த இந்த அத்துமீறலை அடுத்து, நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்திற்காக  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்