Short Story: உதவியால் வந்த தொந்தரவு!

Aug 31, 2026,04:06 PM IST

- பாரதிராஜன்


ரேகா ஒருதலைமைச்செயலக பணியாளர். மணமாகி கணவர் ராகவ் காவ‌ல்துறை விஜிலன்ஸ் காவலர். ஒருமகன், மகள் பள்ளிக்குழந்தைகள்,வாசம் அம்பத்தூரில். மாமனார், மாமியார் வீடு விழுப்புரம். ஞாயிறன்று விழுப்புரத்தில் ஒரு விசேஷம்,அதற்காக  ரேகாவின் கணவர், குழந்தைகள் முதலில் சென்றுவிட்டனர். 


ரேகா துறையில் வழக்கு தொடர்பாக சில தகவல்களை சேகரித்து மேலதிகாரியிடம் சமர்ப்பிக்க தாமதமாகி சுமாராக 8 மணி அளவில் தாம்பரம் வந்து விழுப்புரம் பேருந்துக்காக காத்திருந்த போது வாரக்கடைசியால் எல்லா பேருந்துகளும் நிற்காமல் சென்றது 


அந்த சமயத்தில் அவசர அவசரமாக ஒடி வந்த பெண், ரேகாவைப்பார்த்து  அக்கா, அக்கா என் போன் சார்ஜ் இல்லாததால் பேச முடியாத நிலை, உங்களுடைய போனைக்கொடுங்க ப்ளீஸ் என்றாள். அந்த பெண்ணின் வயது 20க்குள் இருக்கும், ரேகாவும் சரி எனத்தர, அந்த ப்பெண் கொஞ்சம் தள்ளிப்போய் பேசி விட்டு போனை ரேகாவிடம் கொடுத்து விட்டு நன்றி நன்றி என்று சொல்லி விட்டு போய் விட்டாள்,போனை வாங்கிய ரேகா, விழுப்புரம் பஸ்,வரவும் ஏறி காலியாக உள்ள இடத்தைதேடி அமர்ந்து டிக்கட் வாங்கினாள்.




ரேகா விழுப்புரம் வந்ததும் இறங்கினாள். பஸ் ஸ்டேண்டில் கணவன் இருக்க இருவரும் பேசியபடியே வீடு வந்து சாப்பிட்டு தூங்கச்சென்றனர். 


அதிகாலை 5 மணிக்கு போன் அடிக்க, ரேகா நல்ல தூக்கத்தில் இருந்ததால் அவள் கணவன் போனை எடுக்க, எதிர் முனையில் பேசியவர், நான் தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றார். இவர் என்ன விஷயமாக என்றதும் சார் நே‌ற்று இரவு 8 மணிக்கு யாருக்கு போன் செய்தீங்க என்றதும், கணவன் சார், இது என் மனைவி ரேகா போன் அவள் இப்ப தூங்கிட்டிருக்கா என்று சொல்ல, சார் இங்கே ஒரே பிரச்சினை என்றார். 


கணவன் சார் நானும் ஆலந்தூர் காவல்துறை விஜிலன்ஸ் அதிகாரி என்ன விஷயம் சரியாக சொல்லுங்க என்றார், அதற்குள் ரேகா எழுந்து விட, போனை வாங்கிய ரேகா தாம்பரம் காவல் அதிகாரியிடம், தாம்பரம் பஸ் நிலையத்தில் ஒரு பெண் போன் வாங்கி பேசினாள், யாருக்கு பேசினாள் என்ற விவரம் எனக்கு தெரியாது.


அதற்கு காவலர் மேடம் அந்த ப்பெண் கடைசியாக உங்களுடைய போனில் பேசி பிறகு காணவில்லை என்றார். உடனே ரேகாவின் கணவர் சார் என் மனைவி அவசரம் என்றதால் போனை கொடுத்திருக்கிறாள், வேறு எதுவும் தெரியாது என சொல்லி போனை வைத்தார். 


சென்னைக்கு வந்ததும் தாம்பரம் காவல் நிலையம் சென்று விசாரித்ததில் அந்த பெண்கிடைத்த விவரம் தெரிந்தது. ரேகா, இனி மேல் யார் கேட்டாலும் போனைக் கொடுக்காதே என்றார். உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டியது இது தானோ?


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. கிடைப்பதைப் புசிப்போம்; பசியினை முற்றாய் மறப்போம்!

news

Short Story: தனக்கு வந்த தலைவலி

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

Short Story: உதவியால் வந்த தொந்தரவு!

news

என் நினைவெனும் கோயிலில் நீதான் இருக்கிறாய்

news

எம்பெருமான் உருவாக்கிய தாமரைத் தடாகம்.. திருநாவுக்கரசர் வரலாறு.. 10!

news

Motivational Monday: நிச்சயத் தீர்ப்புகள்.. மௌனம் காவாதீர்; பதில் பகருங்கள்!

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்