பூவின் மதிப்பு

Oct 31, 2025,05:06 PM IST

- கவி நிலவு சுமதி சிவக்குமார்


சின்னஞ்சிறு பூவிது

சிங்காரமாய் சிரித்தது

செல்வமகளாய் பிறந்தது வீட்டில் 

செல்லமாய் வளர்ந்தது


கண்ணில் காணுமெல்லாம்

கையில் வந்தது

மாலையில் மொட்டாகி 

காலையில் மலரும்


மலர்களின் சரமோ

மங்கையிவள் கரமோ

தொட்டு மகிழ்ந்து 

தொங்கவிட்டு சென்றது




முன்புறக் கூந்தலில்

முழுநீளம் ஆடியது

அன்ன நடையில்

சின்ன இடையில் அழகாய் 


அவளுக்கோ அதன்மேல் 

அத்தனைப் பிரியம்

மணமாகிய போது

மணமான மல்லிகைதன்


மனதை மயக்கவே

மாமனைக் கேட்டாள்

காலையில் மலர்ந்து

மாலையில் மடியும்


பூக்களின் விலையோ

பொன்விலை தானடி

ஏக்கமும் இதற்கு

இத்தனை‌யேனடி என்றான்


பூக்களைச் சூடிட

பூவைக்கு ஆசையோ ஆசை

கட்டியக் கணவன்

காட்டிற்குப் போனபின்


பூக்களின் மதிப்பு

குறைந்தாலென்ன கூடினாலென்ன

கூந்தலில் சூடிட

கூட்டமும் விடுமோ 


பூவையின் மதிப்போ

பூமகனே உனது

ஊனுடல் உயிரில்

உண்மையில் உள்ளதடா !!


(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி‌ நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார்.  சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்