கோவை: வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு கோவை மாவட்டம் பால்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் அமுல் கந்தசாமி. சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்தவர் அமுல் கந்தசாமி. ஊராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்துள்ளார்.
இவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.

வால்பாறை அதிமுக எம்எல்ஏ., உயிரிழந்துள்ளதால் அந்த தொகுதி தற்போது காலியாகி உள்ளது. இந்த தொகுதி தேர்தல் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. வால்பாறை தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இடைத்தேர்தல் நடத்தாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தது.
இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு காலம் உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையொட்டி வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}