கோவை: வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு கோவை மாவட்டம் பால்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் அமுல் கந்தசாமி. சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்தவர் அமுல் கந்தசாமி. ஊராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்துள்ளார்.
இவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.

வால்பாறை அதிமுக எம்எல்ஏ., உயிரிழந்துள்ளதால் அந்த தொகுதி தற்போது காலியாகி உள்ளது. இந்த தொகுதி தேர்தல் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. வால்பாறை தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இடைத்தேர்தல் நடத்தாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தது.
இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு காலம் உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையொட்டி வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}