- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 13 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 13.. புள்ளிவாய் கீண்டானை பொல்லா அரக்கனை
திருப்பாவை பாசுரம் 13 :
புள்ளிவாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் !
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடந்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயை பிளந்து அழிப்பதற்காக கண்ணனாகவும், அடுத்தவரின் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனை தலையை கொய்ய ராமராகவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழை பாடியபடியே, நம்முடைய தோழியர்கள் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்று அடைந்து விட்டார்கள். கீழ்வானத்தில் வெள்ளியை போல் சூரியன் தோன்ற துவங்கி விட்டது. நிலவு மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், குளிர்ந்த நீரில் நீராடி வராமல் இன்னுமா இப்படி தூங்கிக் கொண்டிருப்பாய்? அந்த கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான். மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் அதிக சிறப்பாயிற்றே! தூக்கத்தில் இப்படி மறைந்து கொண்டிருக்காமல் திருடனை போல் வீட்டிற்குள் மறைந்து கொண்டிருக்காமல் எங்களுடன் நீராட வா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலைப்பயணம்!
Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!
சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
{{comments.comment}}