- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 13 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 13.. புள்ளிவாய் கீண்டானை பொல்லா அரக்கனை
திருப்பாவை பாசுரம் 13 :
புள்ளிவாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் !
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடந்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயை பிளந்து அழிப்பதற்காக கண்ணனாகவும், அடுத்தவரின் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனை தலையை கொய்ய ராமராகவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழை பாடியபடியே, நம்முடைய தோழியர்கள் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்று அடைந்து விட்டார்கள். கீழ்வானத்தில் வெள்ளியை போல் சூரியன் தோன்ற துவங்கி விட்டது. நிலவு மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், குளிர்ந்த நீரில் நீராடி வராமல் இன்னுமா இப்படி தூங்கிக் கொண்டிருப்பாய்? அந்த கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான். மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் அதிக சிறப்பாயிற்றே! தூக்கத்தில் இப்படி மறைந்து கொண்டிருக்காமல் திருடனை போல் வீட்டிற்குள் மறைந்து கொண்டிருக்காமல் எங்களுடன் நீராட வா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இயக்குநர் கே.பாக்யராஜ்.. ஆயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன்.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்
நிதி, மின் துறைகளை தொடர்ந்து விரைவில் வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை
அன்பு வைகோவுக்கு.. பதவி திமுகவுக்கு.. மதிமுக எம்எல்ஏ எடுத்த திடீர் முடிவு!
வாங்க, அடிச்சு விளையாடுவோம்.. தமிழ்நாடு புதிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உற்சாகம்!
Tamil Poem: தேற்றிட யாருளர்?
RIP Director K Baghyaraj: திரைவானத் தூறல் தீர்ந்து போச்சு!
பாக்யராஜ் என்கிற பன்முககலைஞர்!
பாக்கியராஜ் என்றும் ஒரு சகாப்தம்!
திரைத்துறையின் பாக்கியமே.. கலைத்துறையின் அதிசயமே!
{{comments.comment}}