- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 6.. புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்!
திருப்பாவை பாசுரம் 6:
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் :
புற்கள் தங்கள் மீது படர்ந்தள்ள பனிதுளிகளை உதருவதும், பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்டு எம்பெருமான் நாராயணனின் கோவிலில் வெள்ளை நிற சங்கும் எழுப்பும் ஒலி உன் காதுகளில் விழவில்லையா? கொடிய உருவம் எடுத்து தன்னை கொல்ல வந்த பூதகியிடம் பால் குடிப்பது போல் அவளின் உயிரை குடித்தவனும், சக்கர வடிவில் வந்து சகடன் என்ற அரக்கனின் உயிரை பறித்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும், "ஹரி ஹரி" என்று அழைக்கும் குரலும் கூடவா உன் காதுகளில் விழவில்லை. உடனே எழுந்து எங்களுடன் வந்து இந்த ஒலிகளை கேட்டு உள்ளம் மகிழ வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}