- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 6.. புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்!
திருப்பாவை பாசுரம் 6:
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் :
புற்கள் தங்கள் மீது படர்ந்தள்ள பனிதுளிகளை உதருவதும், பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்டு எம்பெருமான் நாராயணனின் கோவிலில் வெள்ளை நிற சங்கும் எழுப்பும் ஒலி உன் காதுகளில் விழவில்லையா? கொடிய உருவம் எடுத்து தன்னை கொல்ல வந்த பூதகியிடம் பால் குடிப்பது போல் அவளின் உயிரை குடித்தவனும், சக்கர வடிவில் வந்து சகடன் என்ற அரக்கனின் உயிரை பறித்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும், "ஹரி ஹரி" என்று அழைக்கும் குரலும் கூடவா உன் காதுகளில் விழவில்லை. உடனே எழுந்து எங்களுடன் வந்து இந்த ஒலிகளை கேட்டு உள்ளம் மகிழ வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}