- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 6.. புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்!
திருப்பாவை பாசுரம் 6:
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் :
புற்கள் தங்கள் மீது படர்ந்தள்ள பனிதுளிகளை உதருவதும், பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்டு எம்பெருமான் நாராயணனின் கோவிலில் வெள்ளை நிற சங்கும் எழுப்பும் ஒலி உன் காதுகளில் விழவில்லையா? கொடிய உருவம் எடுத்து தன்னை கொல்ல வந்த பூதகியிடம் பால் குடிப்பது போல் அவளின் உயிரை குடித்தவனும், சக்கர வடிவில் வந்து சகடன் என்ற அரக்கனின் உயிரை பறித்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும், "ஹரி ஹரி" என்று அழைக்கும் குரலும் கூடவா உன் காதுகளில் விழவில்லை. உடனே எழுந்து எங்களுடன் வந்து இந்த ஒலிகளை கேட்டு உள்ளம் மகிழ வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்
{{comments.comment}}