மார்கழி 6 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 6.. மாயனை மன்னு வட மதுரை மைந்தனை!

Dec 20, 2024,04:58 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 6 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 6.. புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்!


திருப்பாவை பாசுரம் 6:


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்




பொருள் :


புற்கள் தங்கள் மீது படர்ந்தள்ள பனிதுளிகளை உதருவதும், பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்டு எம்பெருமான் நாராயணனின் கோவிலில் வெள்ளை நிற சங்கும் எழுப்பும் ஒலி உன் காதுகளில் விழவில்லையா? கொடிய உருவம் எடுத்து தன்னை கொல்ல வந்த பூதகியிடம் பால் குடிப்பது போல் அவளின் உயிரை குடித்தவனும், சக்கர வடிவில் வந்து சகடன் என்ற அரக்கனின் உயிரை பறித்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும், "ஹரி ஹரி" என்று அழைக்கும் குரலும் கூடவா உன் காதுகளில் விழவில்லை. உடனே எழுந்து எங்களுடன் வந்து இந்த ஒலிகளை கேட்டு உள்ளம் மகிழ வா பெண்ணே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்