மார்கழி 1 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாசுரம் 1

Dec 15, 2024,08:26 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருவெம்பாவை. மார்கழி மாதத்தையொட்டி இந்தப் பாடல்களை தினசரி ஒன்றாகப் பார்ப்போம்.




திருவெம்பாவை பாசுரம் 1 : 


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள்


வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.




பொருள் :


முதலும் முடிவும் இல்லாத ஜோதி வடிவமாக காட்சி தரும் நம்முடைய தலைவனாகிய சிவபெருமானை போற்றி பாடாமல், அவரை தொழுது அடியாளர்கள் பாடிடும் இசை ஒலி கேட்காமல் இப்படி தூங்குகின்றாயே இது சரி தானோ. அடியார்கள் பாடிடும் இந்த பாடலின் சத்தம் உன் காதுகளில் விழவில்லையா? உன்னுடைய காது செவிடா? 


சிவன் அடியார்கள் பாடுவதை வீதிகளில் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் பெருகி விம்மி விம்மி அழுது, வீதிகளில் புரண்டு அழுதிடுவாயே. என்னுடைய தலைவன் சிவன் என முழக்கமிடுவாயே. இப்போது இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்து வந்து எங்களுடன் சிலம்பணிந்த சிவ பெருமானின் திருவடிகளின் பெருமைகளை சொல்லி பாடிட வா பெண்ணே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Short Story: ஏட்டு சுரைக்காய்

news

சிந்தனைச் சிதறல்.. காயும் கனியும் மட்டும் கருணை அல்ல.. நிழலும் காற்றும் வரமே!

news

அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

news

அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

news

ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

news

வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?

news

காற்றே உன் பெயரைக் கேட்டேன்

news

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

அதிகம் பார்க்கும் செய்திகள்