- ஸ்வர்ணலட்சுமி
மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருவெம்பாவை. மார்கழி மாதத்தையொட்டி இந்தப் பாடல்களை தினசரி ஒன்றாகப் பார்ப்போம்.

திருவெம்பாவை பாசுரம் 1 :
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

பொருள் :
முதலும் முடிவும் இல்லாத ஜோதி வடிவமாக காட்சி தரும் நம்முடைய தலைவனாகிய சிவபெருமானை போற்றி பாடாமல், அவரை தொழுது அடியாளர்கள் பாடிடும் இசை ஒலி கேட்காமல் இப்படி தூங்குகின்றாயே இது சரி தானோ. அடியார்கள் பாடிடும் இந்த பாடலின் சத்தம் உன் காதுகளில் விழவில்லையா? உன்னுடைய காது செவிடா?
சிவன் அடியார்கள் பாடுவதை வீதிகளில் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் பெருகி விம்மி விம்மி அழுது, வீதிகளில் புரண்டு அழுதிடுவாயே. என்னுடைய தலைவன் சிவன் என முழக்கமிடுவாயே. இப்போது இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்து வந்து எங்களுடன் சிலம்பணிந்த சிவ பெருமானின் திருவடிகளின் பெருமைகளை சொல்லி பாடிட வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}