- ஸ்வர்ணலட்சுமி
மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருவெம்பாவை. மார்கழி மாதத்தையொட்டி இந்தப் பாடல்களை தினசரி ஒன்றாகப் பார்ப்போம்.
திருவெம்பாவை பாசுரம் 1 :
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள் :
முதலும் முடிவும் இல்லாத ஜோதி வடிவமாக காட்சி தரும் நம்முடைய தலைவனாகிய சிவபெருமானை போற்றி பாடாமல், அவரை தொழுது அடியாளர்கள் பாடிடும் இசை ஒலி கேட்காமல் இப்படி தூங்குகின்றாயே இது சரி தானோ. அடியார்கள் பாடிடும் இந்த பாடலின் சத்தம் உன் காதுகளில் விழவில்லையா? உன்னுடைய காது செவிடா?
சிவன் அடியார்கள் பாடுவதை வீதிகளில் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் பெருகி விம்மி விம்மி அழுது, வீதிகளில் புரண்டு அழுதிடுவாயே. என்னுடைய தலைவன் சிவன் என முழக்கமிடுவாயே. இப்போது இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்து வந்து எங்களுடன் சிலம்பணிந்த சிவ பெருமானின் திருவடிகளின் பெருமைகளை சொல்லி பாடிட வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}