மார்கழி 1 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாசுரம் 1

Dec 15, 2024,08:26 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருவெம்பாவை. மார்கழி மாதத்தையொட்டி இந்தப் பாடல்களை தினசரி ஒன்றாகப் பார்ப்போம்.




திருவெம்பாவை பாசுரம் 1 : 


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள்


வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.




பொருள் :


முதலும் முடிவும் இல்லாத ஜோதி வடிவமாக காட்சி தரும் நம்முடைய தலைவனாகிய சிவபெருமானை போற்றி பாடாமல், அவரை தொழுது அடியாளர்கள் பாடிடும் இசை ஒலி கேட்காமல் இப்படி தூங்குகின்றாயே இது சரி தானோ. அடியார்கள் பாடிடும் இந்த பாடலின் சத்தம் உன் காதுகளில் விழவில்லையா? உன்னுடைய காது செவிடா? 


சிவன் அடியார்கள் பாடுவதை வீதிகளில் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் பெருகி விம்மி விம்மி அழுது, வீதிகளில் புரண்டு அழுதிடுவாயே. என்னுடைய தலைவன் சிவன் என முழக்கமிடுவாயே. இப்போது இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்து வந்து எங்களுடன் சிலம்பணிந்த சிவ பெருமானின் திருவடிகளின் பெருமைகளை சொல்லி பாடிட வா பெண்ணே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்