- ஸ்வர்ணலட்சுமி
மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருவெம்பாவை. மார்கழி மாதத்தையொட்டி இந்தப் பாடல்களை தினசரி ஒன்றாகப் பார்ப்போம்.
திருவெம்பாவை பாசுரம் 1 :
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள் :
முதலும் முடிவும் இல்லாத ஜோதி வடிவமாக காட்சி தரும் நம்முடைய தலைவனாகிய சிவபெருமானை போற்றி பாடாமல், அவரை தொழுது அடியாளர்கள் பாடிடும் இசை ஒலி கேட்காமல் இப்படி தூங்குகின்றாயே இது சரி தானோ. அடியார்கள் பாடிடும் இந்த பாடலின் சத்தம் உன் காதுகளில் விழவில்லையா? உன்னுடைய காது செவிடா?
சிவன் அடியார்கள் பாடுவதை வீதிகளில் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் பெருகி விம்மி விம்மி அழுது, வீதிகளில் புரண்டு அழுதிடுவாயே. என்னுடைய தலைவன் சிவன் என முழக்கமிடுவாயே. இப்போது இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்து வந்து எங்களுடன் சிலம்பணிந்த சிவ பெருமானின் திருவடிகளின் பெருமைகளை சொல்லி பாடிட வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?
என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!
PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு
கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!
Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!
ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்
நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!
தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!
{{comments.comment}}