இந்த நகரம் எனக்கு நரகம்!

Feb 03, 2026,04:50 PM IST

- கவிஞர் சு. நாகராஜன்


ஒற்றைப்பனை உயரமாய் 

ஓங்கி உயர்ந்த கட்டிடம் 

ஏறி தாண்ட முடியாத 

சுற்றுச்சுவர் சுற்றிலும்


கயிறு போல நீண்டு தான் புகைவண்டி செல்லுது 




பறவை என்று வியந்தேன் 

உயிர் இல்லையே 

கழுகு போல வேகமாய் 

காற்றை உரசி செல்லுது 


முதல் பரிசு வாங்கணுமே 

கனவு கண்டேன் _இங்கு 

முற்றமே இல்லையே 

தெரிந்து கொண்டேன் 


கடலிலே நீச்சல் அடிக்க 

மனது கொண்டதே 

அதை பழகிக் கொள்ள 

எங்க ஊரில் கிணறு இல்லையே 


மழை பெய்தால் 

மண் வாசம் மறைந்து போனதே 

இன்று தெருவெல்லாம் கற்கள் போட்டு அடைக்கப்பட்டதால்


எங்கையா இருக்கு

என் தாத்தா வாழ்ந்த கிராமம் 

அங்கேயே தங்குகிறேன்


இந்த நகரம் எனக்கு நரகம்


(சு. நாகராஜன், இடைநிலை ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்