சென்னை: நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விஜய்யின் பேச்சிற்கு பதில் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தவெக கட்சி தயாரகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தனது பிரச்சாரப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிமை தொடங்கினார். தனது முதல் கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார்.
இன்று நாகையில் தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார் விஜய். அதன்படி இன்று நாகை மாவட்டம் சென்ற தவெக தலைவர் விஜய், நேரடியாகவே முதல்வரிடம் கேட்கிறேன்.. என்னை மிரட்டிப் பார்க்கறீங்களா.. அதுக்கு நான் ஆள் இல்லை. அதுக்கு நாங்க ஆள் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாகப்பட்டனத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனையடுத்து, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லையாம் என்று தெரிவித்திருந்தார் தவெக தலைவர் விஜய். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய்யின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது என்றும், நாகை மருத்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்
மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை
ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!
எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)
வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
நிறை குடம்
{{comments.comment}}