சென்னை: நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விஜய்யின் பேச்சிற்கு பதில் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தவெக கட்சி தயாரகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தனது பிரச்சாரப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிமை தொடங்கினார். தனது முதல் கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார்.
இன்று நாகையில் தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார் விஜய். அதன்படி இன்று நாகை மாவட்டம் சென்ற தவெக தலைவர் விஜய், நேரடியாகவே முதல்வரிடம் கேட்கிறேன்.. என்னை மிரட்டிப் பார்க்கறீங்களா.. அதுக்கு நான் ஆள் இல்லை. அதுக்கு நாங்க ஆள் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாகப்பட்டனத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனையடுத்து, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லையாம் என்று தெரிவித்திருந்தார் தவெக தலைவர் விஜய். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய்யின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது என்றும், நாகை மருத்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}