சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை என, திமுக எம்.பி. கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்.
தேசிய எலக்ட்ரிக் பஸ் திட்டம் (NEBP) தொடர்பாக திமுக எம்.பி. ஆர்.கிரிராஜன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
50,000 மின்சார வாகனங்களைப் பயன்படுத்த கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) அமைப்பை ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதா, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின்சாரப் பேருந்துகளின் விவரங்கள் குறித்து கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் நிதின் கட்காரி, 13.05.2022ல் நிதி ஆயோக் கடிதத்தின் படி அந்த பணியை முடிக்க CESLக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக PM-eBus சேவா மற்றும் PM e-Drive போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மாநில போக்குவரத்து கழகங்கள் இந்த உதவிக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அல்லது கனரக தொழில்கள் அமைச்சகத்திற்கு முன்மொழிவுகளை அனுப்பலாம் என பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி உதவி ஏதும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா என்ற இன்னொரு கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளிக்கையில், TNSTC-க்கு கடந்த 5 ஆண்டுகளில் நிதியுதவியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களால் 10677 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
மீனவர்களின் கண்ணீர் பயணம்!
ஆடி மாதம் வந்தாச்சு.. அம்மன் அருளும் தந்தாச்சு.. ஆடி மாத சிறப்புகள்!
பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
ஓர் இரும்பு கூழானது!
Short Story: கன்னிகாஸ்திரி !
Tamil Poem: பணமும் மனிதமும்!
{{comments.comment}}