- ஸ்வர்ணலட்சுமி
விசுவாசு வருடம் 20 25 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடி மாதம் 13 ஆம் நாள் கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாள் திருமாலின் வாகனமான கருடனை வணங்குவதுடன், திருமாலையும் ஆதிசேஷனையும் வழிபடுவதும் வழக்கமாகும் .சில கோவில்களில் கௌரி அம்மனை நாக வடிவில் வழிபடும் வழக்கமும் உள்ளது.
ஜாதகத்தில் ராகு கேது தோஷங்களும் ,சர்ப்ப தோஷங்களும் ,காலசர்ப்ப தோஷங்களும் போன்ற தோஷங்கள் நீங்க இந்த நாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். கணவன்- மனைவி பிரச்சினைகள் ,குழந்தை பாக்கியம் தாமதம் போன்றவற்றை நீக்க கருட பஞ்சமி வழிபாடு அதீத சிறப்பானது.
காஷ் யபர் மற்றும் வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாக இந்நாள் கருதப்படுகிறது. நாகர்களை வழிபடும் நாக பஞ்சமியும் ,விஷ்ணுவின் வாகனமான கருடனை வழிபடும் கருட பஞ்சமியும் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி யான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
கடுமையான சூழ்ச்சியின் காரணமாக கருடனின் தாயார் வினதை நாகர்களிடம் அடிமையாக இருந்தார் தன் தாயை மீட்பதற்காக தேவர்களிடம் கருடன் போரிட வேண்டியதாயிற்று. தேவர்களிடமிருந்து அமிர்த கலசத்தை பெற்று தன் தாயை மீட்டு அமிர்தத்தை கொண்டு வந்த நாள் தான் கருட பஞ்சமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. கருட பஞ்சமி நாளில் கருடனின் கதை கேட்டாலே அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். தன் தாயை மீட்க கருடன் காட்டிய அளவற்ற பாசத்தைக் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக ஏற்றுக்கொண்டு பெருமைப்படுத்தினார்.
பெருமாள் கோவில்களில் இருக்கும் கருட பகவானை தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் விரதம் இருந்து கருடனை வணங்கினால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் திருப்பதி, காஞ்சி ,நாகர்கோயில், அண்ணாமலை, சுசீந்திரம் போன்ற திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன . கருடன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது .கருட பகவான் விஷ்ணுவின் வாகனமாக விளங்கும் ஒரு தெய்வீக பறவை .அவர் நாகங்களை தங்கள் பகைவராக கொண்டவர். வைஷ்ணவர்களால் மிகவும் போற்றப்படும் தெய்வமாகவும் ,தீய சக்திகளை அழிக்க வல்லவராகவும் உள்ளவர் கருடன்.
பஞ்சமிதிதி யான இன்று அனைவரும் கருட பகவானை தரிசித்து நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நேரம் கடந்தாச்சு.. இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் விஜய்?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
{{comments.comment}}