கருட பஞ்சமி .. திருமாலுடன் ஆதிசேஷனையும் சேர்த்து வணங்குவோம்.. அருள் பெறுவோம்

Jul 29, 2025,10:46 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாசு வருடம் 20 25 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடி மாதம் 13 ஆம் நாள் கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது.


இந்த நாள் திருமாலின் வாகனமான கருடனை வணங்குவதுடன், திருமாலையும் ஆதிசேஷனையும் வழிபடுவதும் வழக்கமாகும் .சில கோவில்களில் கௌரி அம்மனை நாக வடிவில் வழிபடும் வழக்கமும் உள்ளது.


ஜாதகத்தில் ராகு கேது தோஷங்களும் ,சர்ப்ப தோஷங்களும் ,காலசர்ப்ப தோஷங்களும் போன்ற தோஷங்கள் நீங்க இந்த நாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். கணவன்- மனைவி பிரச்சினைகள் ,குழந்தை பாக்கியம் தாமதம் போன்றவற்றை நீக்க கருட பஞ்சமி வழிபாடு அதீத சிறப்பானது.


காஷ் யபர் மற்றும்  வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாக இந்நாள் கருதப்படுகிறது. நாகர்களை வழிபடும் நாக பஞ்சமியும் ,விஷ்ணுவின் வாகனமான கருடனை வழிபடும் கருட பஞ்சமியும் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி யான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.




கடுமையான சூழ்ச்சியின் காரணமாக கருடனின் தாயார் வினதை நாகர்களிடம் அடிமையாக இருந்தார் தன் தாயை மீட்பதற்காக தேவர்களிடம் கருடன் போரிட வேண்டியதாயிற்று. தேவர்களிடமிருந்து அமிர்த கலசத்தை பெற்று தன் தாயை மீட்டு அமிர்தத்தை கொண்டு வந்த நாள் தான் கருட பஞ்சமியாக  அனுஷ்டிக்கப்படுகிறது. கருட பஞ்சமி நாளில் கருடனின் கதை கேட்டாலே அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். தன் தாயை மீட்க கருடன் காட்டிய அளவற்ற பாசத்தைக் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக  ஏற்றுக்கொண்டு பெருமைப்படுத்தினார்.


பெருமாள் கோவில்களில் இருக்கும் கருட  பகவானை தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் விரதம் இருந்து கருடனை வணங்கினால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.


இந்த நாளில் திருப்பதி, காஞ்சி ,நாகர்கோயில், அண்ணாமலை, சுசீந்திரம் போன்ற திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன . கருடன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது .கருட பகவான் விஷ்ணுவின் வாகனமாக விளங்கும் ஒரு தெய்வீக பறவை .அவர் நாகங்களை தங்கள் பகைவராக கொண்டவர். வைஷ்ணவர்களால் மிகவும் போற்றப்படும் தெய்வமாகவும் ,தீய சக்திகளை அழிக்க வல்லவராகவும் உள்ளவர் கருடன்.


பஞ்சமிதிதி  யான இன்று அனைவரும் கருட பகவானை தரிசித்து நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து

news

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்

news

மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை

news

ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!

news

ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!

news

எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)

news

வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

news

நிறை குடம்

அதிகம் பார்க்கும் செய்திகள்