- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: இன்று 25 மாசி முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம்.
அது என்ன விஷ்ணு புண்ணிய காலம்?
விஷ்ணுபதி புண்ணிய காலம் பகவான் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான காலமாகும். நமது இந்து நாட்காட்டியில் ஒரு வருடத்தில் நான்கு முறை விஷ்ணுபதி புண்ணிய காலம் அனுஷ்டிக்கப்படுகிறது. வைகாசி முதல் நாள், ஆவணி முதல் நாள் கார்த்திகை முதல் நாள், மாசி முதல் நாள், விஷ்ணுபதி புண்ணிய காலமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
நேரம்:

விஷ்ணுபதி புண்ணிய காலம் தை மாதம் கடைசி நாள் பிப்ரவரி 12 புதன் அன்று 1:30 மணி துவங்கி 13ஆம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு முடிகிறது.
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது விஷ்ணுவின் கடுமையான அவதாரமான நரசிம்மரை லக்ஷ்மி தேவி அமைதி படுத்திய தருணத்தை நினைவு கூறுகிறது. நரசிம்மர் ஹிரண்ய கசிபு என்கிற அசுர மன்னனை கொன்ற பிறகு மிகவும் கோபமாக இருந்தார். அவரின் கோபத்தை லட்சுமி தேவி தலையிட்டு அமைதி அடைய செய்து லட்சுமி நரசிம்மராக மாற்றினார் .இந்த தெய்வீக தருணம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று கொண்டாடப்படுகிறது.
இந்நேரத்தில் விஷ்ணுவின் கருணையும் ஆசிகளும் மிகுதியாக இருக்கும் இந்த புண்ணிய காலத்தில் விஷ்ணுவை வழிபடவும் அவரின் ஆசி பெறவும் உகந்த காலம் அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து அருகில் உள்ள விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம் .27 பூக்கள் துளசி மாலை ஏந்திக்கொண்டு கோவிலை அல்லது கொடிமரம் அல்லது கருடாழ்வாரை 27 முறை சுற்றி வருவது நம் வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லி ஒவ்வொரு முறை சுற்றி வரும் போது ஒவ்வொரு பூக்களாக வைத்து வழிபாடு செய்யலாம். நம்மால் இயன்றவரை தான தர்மங்கள் செய்வது சாலச் சிறந்தது.
விஷ்ணு புண்ணிய காலத்தன்று சொல்ல வேண்டிய மந்திரம்:
விஷ்ணு காயத்ரி
நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி/ தன்னோ விஷ்ணு பிரசோதயாத்//
கருடன் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ண பக்ஷாய தீமஹி /தன்னோ கருட :பிரசோதயாத்//
அனைவரும் ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா நாராயணா என்று ஒவ்வொரு முறை கோவிலை சுற்றி வரும் பொழுது கூறி வழிபட மிகவும் உகந்த நாள் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம். அனைவரும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோமாக.
மிரட்டிய இங்கிலாந்து.. இளம் புயல் ஜேக்கப் பெத்தேலின் சதம்.. வீணானது.. பைனலில் இந்தியா!
இந்தியாவின் தெறி ஆட்டம்.. இறுதிப் போட்டிக்குப் போக .. இங்கிலாந்துக்குத் தேவை 254 ரன்கள்!
Sanju Samson: மும்பை அரையிறுதியில் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. அந்த அரபிக் கடலே அதிர்ந்து போச்சு!
இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
நிதீஷ் குமார் நிலை இபிஎஸ்-க்கு வந்து விடக் கூடாது... மாணிக்கம் தாகூர் அக்கறை
Nitish Kumar: பாஜக.,வேலையே இது தான்...நான் அப்பவே சொன்னேன்...தேஜஸ்வி ஆதங்கம்
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு!
தமிழகத்திலும் பீகார் பார்முலா... பாஜக மீது விசிக வன்னி அரசு விமர்சனம்
{{comments.comment}}