விஷ்ணுபதி புண்ணிய காலம்.. நரசிம்மரை.. லட்சுமி தேவி அமைதிப்படுத்திய தருணம்!

Feb 13, 2025,10:46 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: இன்று 25 மாசி முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம். 


அது என்ன விஷ்ணு புண்ணிய காலம்?


விஷ்ணுபதி புண்ணிய காலம் பகவான் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான காலமாகும். நமது இந்து நாட்காட்டியில் ஒரு வருடத்தில் நான்கு முறை விஷ்ணுபதி புண்ணிய காலம் அனுஷ்டிக்கப்படுகிறது. வைகாசி முதல் நாள், ஆவணி முதல் நாள் கார்த்திகை முதல் நாள், மாசி முதல் நாள், விஷ்ணுபதி புண்ணிய காலமாக அனுஷ்டிக்கப்படுகிறது.


நேரம்:




விஷ்ணுபதி புண்ணிய காலம் தை மாதம் கடைசி நாள் பிப்ரவரி 12 புதன் அன்று 1:30 மணி துவங்கி 13ஆம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு முடிகிறது. 


விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது விஷ்ணுவின் கடுமையான அவதாரமான நரசிம்மரை  லக்ஷ்மி தேவி அமைதி படுத்திய தருணத்தை நினைவு கூறுகிறது. நரசிம்மர் ஹிரண்ய கசிபு என்கிற அசுர மன்னனை கொன்ற பிறகு மிகவும் கோபமாக இருந்தார். அவரின் கோபத்தை லட்சுமி தேவி தலையிட்டு அமைதி அடைய செய்து லட்சுமி நரசிம்மராக மாற்றினார் .இந்த தெய்வீக தருணம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று கொண்டாடப்படுகிறது.


இந்நேரத்தில் விஷ்ணுவின் கருணையும் ஆசிகளும் மிகுதியாக இருக்கும் இந்த புண்ணிய காலத்தில் விஷ்ணுவை வழிபடவும் அவரின் ஆசி பெறவும் உகந்த காலம் அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து அருகில் உள்ள விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம் .27 பூக்கள் துளசி மாலை ஏந்திக்கொண்டு கோவிலை அல்லது கொடிமரம் அல்லது கருடாழ்வாரை 27 முறை சுற்றி வருவது நம் வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லி ஒவ்வொரு முறை சுற்றி வரும் போது ஒவ்வொரு பூக்களாக வைத்து வழிபாடு செய்யலாம். நம்மால் இயன்றவரை தான தர்மங்கள் செய்வது சாலச் சிறந்தது. 


விஷ்ணு புண்ணிய காலத்தன்று சொல்ல வேண்டிய மந்திரம்:


விஷ்ணு காயத்ரி

நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி/ தன்னோ விஷ்ணு பிரசோதயாத்//

கருடன் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ண பக்ஷாய தீமஹி /தன்னோ கருட :பிரசோதயாத்//


அனைவரும் ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா நாராயணா என்று ஒவ்வொரு முறை கோவிலை சுற்றி வரும் பொழுது கூறி வழிபட மிகவும் உகந்த நாள் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம். அனைவரும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோமாக.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்

news

மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்

news

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!

news

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்