சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
தமிழகத்தில் நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுத உள்ளனர்.இத்தேர்வு சுமார் 2763 மையங்களில் காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வின் போது பறக்கும் படையின் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் காவலர்க் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தேர்வினை எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். தேர்வர்கள் 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வு மையங்கள் குறிப்பாக பள்ளிகளில் தான் நடைபெறும் என்பதால், நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை விவரத்தை பள்ளிகளுக்கு தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல். 2024-2025 கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}