சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
தமிழகத்தில் நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுத உள்ளனர்.இத்தேர்வு சுமார் 2763 மையங்களில் காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வின் போது பறக்கும் படையின் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் காவலர்க் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தேர்வினை எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். தேர்வர்கள் 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வு மையங்கள் குறிப்பாக பள்ளிகளில் தான் நடைபெறும் என்பதால், நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை விவரத்தை பள்ளிகளுக்கு தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல். 2024-2025 கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}