திருச்சி: தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரித்து வெயில் கொடுமை அதிகரித்துள்ள நிலையில், திருச்சிராப்பள்ளி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு வெயில் படிப்படியாக உயரும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நிலவும் வெயில் தாக்கத்தால் மக்கள் பலரும் தவித்து வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி பறவைகளும், விலங்குகளும், உஷ்ணத்தை தாங்க முடியாமல் அங்கேயும் இங்கேயுமாக அலைந்து திரிகின்றன.

வனப்பகுதியில் பல உயிரினங்கள் போதிய தண்ணீர், உணவு கிடைக்காமல் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வருட வருடம் வெயில் காலங்களை சமாளிக்க அந்தந்த மாவட்டங்களில் கோவில் யானைகளுக்கு சிறப்பு முகாம் நடத்துவது வழக்கம். இதில் யானைகளுக்கு உடல் மற்றும் உள்ளம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வு பெறவும், புத்துணர்ச்சி அளிக்கவும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி உரிமை இல்லாத தனியார் யானைகளையும், யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட முகாம் ஒன்று, திருச்சிராப்பள்ளி எம்.ஆர்.பாளையத்தில் இருக்கிறது. அங்குள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். யானைகளின் உடல் உஷ்ணத்தை குறைக்க வனத்துறையினர் மழை குளியல், மண் குளியல், நீச்சல் குளங்கள் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த யானைகள் முகாமின் மருத்துவரான டாக்டர் கலைவண்ணன் இந்த ஏற்பாடுகள் குறித்துக் கூறும்போது,
எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடத்தி வருகிறோம். இந்த முகாமில் இப்போ 11 யானைகள் உள்ளன. இந்த யானைகள் அனைத்துமே உரிமம் இல்லாமல் தனியார்கள் வளர்த்த யானைகள். அவற்றை இங்கு கொண்டு வந்து பராமரிக்கிறோம்.
இந்த முகாமானது 2019 முதல் நடந்து வருகிறது. இங்கு யானைகள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. யானைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த முகாமில் உள்ளன. கால்நடை மருத்துவர் பரிந்துரைத்தபடி தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுகளுடன் தினசரி உணவளிக்கிறோம்.
எங்களிடம் ஒரு கால்நடை மருத்துவர் இருக்கிறார், அவர் ஒவ்வொரு வாரமும் இங்கு வருவார். யானைகளை பரிசோத்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என கூறினார்.
புதிய ஷவர் பாத்தில் யானைகள் சமத்தாகவும், ஜாலியாகவும் குளிப்பது பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அதேபோல தொட்டியில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரை எடுத்து தங்கள் மீது அடித்துக் கொண்டு ஜாலியாகவும் அவை குளிக்கின்றன.
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி
என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!
2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா
"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை
மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை
நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
{{comments.comment}}