ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!

Jan 28, 2025,06:10 PM IST

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி ஸ்ரீரங்கம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த அன்பு என்பவர் பிரபல ரவுடி திலீபின் கூட்டாளி என கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.


பிரபல ரவுடி அன்பு ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள ஜிம்மிற்கு தினமும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படியே இன்றைய தினம் ஜிம்மிற்கு சென்று  விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறைத்தனர். 




அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அதிர்ச்சி அடைந்த அன்பு தன்னைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டு விட்டதை அறிந்து சுதாரித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்தக் கும்பல் விடவில்லை, அன்புவைத் துரத்தினர். ஒரு கட்டத்தில் அன்புவால் ஓட முடியவில்லை. அந்தக் கும்பல் அவரை மடக்கி விட்டது. பின்னர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.  சம்பவ இடத்திலேயே அன்பு பிணமானார்.


இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்