திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த அன்பு என்பவர் பிரபல ரவுடி திலீபின் கூட்டாளி என கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பிரபல ரவுடி அன்பு ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள ஜிம்மிற்கு தினமும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படியே இன்றைய தினம் ஜிம்மிற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறைத்தனர்.

அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அதிர்ச்சி அடைந்த அன்பு தன்னைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டு விட்டதை அறிந்து சுதாரித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்தக் கும்பல் விடவில்லை, அன்புவைத் துரத்தினர். ஒரு கட்டத்தில் அன்புவால் ஓட முடியவில்லை. அந்தக் கும்பல் அவரை மடக்கி விட்டது. பின்னர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். சம்பவ இடத்திலேயே அன்பு பிணமானார்.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}