திமுகவுடன் இணைந்து மோடிக்கு எதிராக செயல்படும் இபிஎஸ்.. திருச்சி சூர்யா திடீர் புகார்

Apr 08, 2023,04:15 PM IST

சென்னை: திமுக ஐடி விங்குடன் இணைந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு எதிராக கோபேக் மோடி டிரண்ட் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தவர் திருச்சி சூர்யா. தீவிர அண்ணாமலை ஆதரவாளர். அண்ணாமலைதான் அடுத்த தமிழ்நாடு முதல்வர் என்று தொடர்ந்து கூறி வந்தவர், கூறியும் வருபவர். இந்த நிலையில் அவருக்கும் பாஜக பெண் பிரமுகர் டெய்சிக்கும் இடையே நடந்த மோதல், அதுதொடர்பான ஆடியோ ஆகியவை வெளியானதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் சூர்யா பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.



பாஜகவின் மூத்த தலைவரான கேசவ விநாயகம் மீது குற்றம் சாட்டி விட்டு கட்சியை விட்டு விலகினார். இதனால் சலசலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வரும் சூர்யா, இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டி ஒரு டிவீட் போட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்டில், #Vanakkam_Modi தமிழ்நாட்டின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளரே.பாரதப் பிரதமர் அவர்களே வருக! வருக!  @EPSTamilNadu
நேரடியாக அண்ணன் அண்ணாமலை அவர்களிடம் மோத முடியாமல் திமுக ஐடி விங் உடன் இணைந்து  Gobackmodi என்று டிரெண்ட் செய்வது சரியா  @narendramodi @PMOIndia.

பாரத பிரதமர் அவர்கள் உணர்வார்கள். துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கும் உங்களுக்கு அம்மையார் ஜெயலலிதாவுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கும் சேர்த்து எங்கள் பாரதப் பிரதமர் அவர்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று கூறியுள்ளார் சூர்யா.

இந்த ட்வீட் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பதில் அளித்து வருகின்றனர். சூர்யா ஏன் இப்படி டிவீட் போட்டார் என்று தெரியவில்லை. சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் ஒத்துப் போகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையை கண்டு கொள்வதில்லை. அதிமுக தரப்பும் அண்ணாமலையை மதிப்பதில்லை. நேரடியாக மேலிடத்துடன் பேச ஆரம்பித்து விட்டனர். இதெல்லாம் சேர்த்து அதிமுக - பாஜக இடையே புகைச்சலாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் தீவிர அண்ணாமலை ஆதரவாளரான சூர்யாவின் டிவீட் வந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

news

முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

news

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்