கோமியத்தில் வாய் கொப்பளிச்சுட்டு பேசுங்க.. அதிர வைத்த அமைச்சர்!

Jan 17, 2023,11:09 AM IST
அகர்தலா:  ஜனநாயகம் பற்றிப் பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதி இல்லை. அப்படிப் பேசுவதாக இருந்தால் முதலில் கோமியத்தில் வாய் கொப்பளித்து விட்டுப் பேசட்டும் என்று திரிபுரா சட்ட அமைச்சர் ரத்தன் லால் நாத் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



திரிபுரா மாநில சட்ட அமைச்சராக இருப்பவர் ரத்தன்லால்நாத். இவர் 34 வருட காலம் காங்கிரஸில் இருந்தவர். கடந்த 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர். தற்போது அந்த மாநில பாஜக அரசில் அமைச்சராக இருக்கிறார்.

இவர் சிபிஎம், காங்கிரஸ் குறித்து நேற்று பேசும்போது சர்ச்சையான வகையில் பேசினார். அவர் கூறுகையில்,  வருகிற சட்டசபைத் தேர்தலுக்காக சிபிஎம்மும், காங்கிரஸும் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளவுள்ளன. இவர்களுக்கு ஜனநாயகம் குறித்துப் பேச தகுதி இல்லை. அப்படிப் பேசுவதாக இருந்தால் முதலில் கோமியத்தில் வாய் கொப்பளித்து விட்டுப் பேசட்டும். கடந்த ஆட்சிக்காலங்களில் இவர்கள் திரிபுராவுக்கு என்ன செய்தார்கள்.. வன்முறையை வளர்த்தார்கள்,ஸ்திரமின்மையை கட்டிக் காத்தார்கள் என்றார் அவர்.

இவரது இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிபிஎம் பொதுச் செயலாளர் ஜிதேந்திர செளத்ரி கூறுகையில், ஜனநாயகம் குறித்துப் பேசினால், தினசரி கோமியம் குடிப்பவர்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும் என்றார் அவர் காட்டமாக.

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்