கோமியத்தில் வாய் கொப்பளிச்சுட்டு பேசுங்க.. அதிர வைத்த அமைச்சர்!

Jan 17, 2023,11:09 AM IST
அகர்தலா:  ஜனநாயகம் பற்றிப் பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதி இல்லை. அப்படிப் பேசுவதாக இருந்தால் முதலில் கோமியத்தில் வாய் கொப்பளித்து விட்டுப் பேசட்டும் என்று திரிபுரா சட்ட அமைச்சர் ரத்தன் லால் நாத் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



திரிபுரா மாநில சட்ட அமைச்சராக இருப்பவர் ரத்தன்லால்நாத். இவர் 34 வருட காலம் காங்கிரஸில் இருந்தவர். கடந்த 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர். தற்போது அந்த மாநில பாஜக அரசில் அமைச்சராக இருக்கிறார்.

இவர் சிபிஎம், காங்கிரஸ் குறித்து நேற்று பேசும்போது சர்ச்சையான வகையில் பேசினார். அவர் கூறுகையில்,  வருகிற சட்டசபைத் தேர்தலுக்காக சிபிஎம்மும், காங்கிரஸும் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளவுள்ளன. இவர்களுக்கு ஜனநாயகம் குறித்துப் பேச தகுதி இல்லை. அப்படிப் பேசுவதாக இருந்தால் முதலில் கோமியத்தில் வாய் கொப்பளித்து விட்டுப் பேசட்டும். கடந்த ஆட்சிக்காலங்களில் இவர்கள் திரிபுராவுக்கு என்ன செய்தார்கள்.. வன்முறையை வளர்த்தார்கள்,ஸ்திரமின்மையை கட்டிக் காத்தார்கள் என்றார் அவர்.

இவரது இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிபிஎம் பொதுச் செயலாளர் ஜிதேந்திர செளத்ரி கூறுகையில், ஜனநாயகம் குறித்துப் பேசினால், தினசரி கோமியம் குடிப்பவர்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும் என்றார் அவர் காட்டமாக.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்