தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

Mar 05, 2025,05:37 PM IST

சென்னை:தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.


திமுக தலைவர் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் மட்டும் பங்கு பெறவில்லை. அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்துக் கட்சிகளும் முன்மொழிந்துள்ளன.


இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் அதன் நிலைப்பாடு குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கலந்து கொண்ட அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இங்கிருக்கும் அனைவருக்கும் வணக்கம். 




தொகுதி மறுசீரமைப்பு செய்வது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களை பெரும் பாதிப்பை உண்டாக்கும். இது ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை கடைபிடிப்பதற்கான தண்டனையே அன்றி வேறில்லை. 


முன்னாள் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் 42வது சட்ட திருத்தத்தின் மூலம் 1976 இல் இருந்து 2001 வரை தொகுதி மறு சீரமைப்பை நிறுத்தி வைத்தார். அதேபோல் 84 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் முன்னாள் பிரதமர் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் 2001 இல் இருந்து 2026 வரை மேலும் 25 ஆண்டுகளுக்கு இந்த மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார். அப்போது அவர் சொன்ன காரணம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயமாக இருக்காது என்பதே அந்த காரணம். இப்போதும் அப்படியே தான் இருக்கிறது. 


எனவே, தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

news

தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

news

புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்