தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

Mar 05, 2025,05:37 PM IST

சென்னை:தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.


திமுக தலைவர் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் மட்டும் பங்கு பெறவில்லை. அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்துக் கட்சிகளும் முன்மொழிந்துள்ளன.


இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் அதன் நிலைப்பாடு குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கலந்து கொண்ட அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இங்கிருக்கும் அனைவருக்கும் வணக்கம். 




தொகுதி மறுசீரமைப்பு செய்வது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களை பெரும் பாதிப்பை உண்டாக்கும். இது ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை கடைபிடிப்பதற்கான தண்டனையே அன்றி வேறில்லை. 


முன்னாள் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் 42வது சட்ட திருத்தத்தின் மூலம் 1976 இல் இருந்து 2001 வரை தொகுதி மறு சீரமைப்பை நிறுத்தி வைத்தார். அதேபோல் 84 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் முன்னாள் பிரதமர் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் 2001 இல் இருந்து 2026 வரை மேலும் 25 ஆண்டுகளுக்கு இந்த மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார். அப்போது அவர் சொன்ன காரணம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயமாக இருக்காது என்பதே அந்த காரணம். இப்போதும் அப்படியே தான் இருக்கிறது. 


எனவே, தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்