சென்னை: நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிய இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்த நாள் இன்று. ஜவர்கலால் நேரு குழந்தைகள் மீது அதிக பற்றும் அன்பும் கொண்டவர். கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியவர். அது மட்டுமல்லாமல் இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம் என்ற நேருவின் கூற்றை அங்கீகரிக்கும் நோக்கில் அன்னாரின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது . குழந்தைகளும் நேர் மீது அதிக பிரியம் கொண்டதால் அவரை செல்லமாக குழந்தைகள் நேரு மாமா என்றும் அழைத்து வந்தனர்.
நேருவின் மறைவிற்குப் பிறகு அவரை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் அனைத்து பள்ளிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தலைவர்களின் பிறந்தநாளுக்கும் அவ்வப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக குரல் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்று குழந்தைகள் தினம் என்பதால், விஜய் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி குறிப்பு:
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது குழந்தைகளின் மனது பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல், போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல் தெளிந்த நீரை போல் பரிசுத்தமானது.
நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுகந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம்..! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்து போற்றும் மகிழ்வோம். குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}