சென்னை: நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிய இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்த நாள் இன்று. ஜவர்கலால் நேரு குழந்தைகள் மீது அதிக பற்றும் அன்பும் கொண்டவர். கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியவர். அது மட்டுமல்லாமல் இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம் என்ற நேருவின் கூற்றை அங்கீகரிக்கும் நோக்கில் அன்னாரின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது . குழந்தைகளும் நேர் மீது அதிக பிரியம் கொண்டதால் அவரை செல்லமாக குழந்தைகள் நேரு மாமா என்றும் அழைத்து வந்தனர்.
நேருவின் மறைவிற்குப் பிறகு அவரை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் அனைத்து பள்ளிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தலைவர்களின் பிறந்தநாளுக்கும் அவ்வப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக குரல் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்று குழந்தைகள் தினம் என்பதால், விஜய் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி குறிப்பு:
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது குழந்தைகளின் மனது பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல், போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல் தெளிந்த நீரை போல் பரிசுத்தமானது.
நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுகந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம்..! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்து போற்றும் மகிழ்வோம். குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}