மழலைச் செல்வங்களுக்கு.. சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிடுவோம்.. விஜய் வாழ்த்து

Nov 14, 2024,02:43 PM IST

சென்னை: நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிய இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்த நாள் இன்று. ஜவர்கலால் நேரு குழந்தைகள் மீது அதிக பற்றும் அன்பும் கொண்டவர். கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியவர். அது மட்டுமல்லாமல் இன்றைய குழந்தைகள்  நாளைய எதிர்காலம் என்ற  நேருவின் கூற்றை அங்கீகரிக்கும் நோக்கில்  அன்னாரின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது . குழந்தைகளும் நேர் மீது அதிக பிரியம் கொண்டதால் அவரை செல்லமாக குழந்தைகள் நேரு மாமா என்றும் அழைத்து வந்தனர்.


நேருவின் மறைவிற்குப் பிறகு அவரை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் அனைத்து பள்ளிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தலைவர்களின் பிறந்தநாளுக்கும் அவ்வப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக குரல் கொடுத்து வருகிறார். 




அந்த வகையில் இன்று குழந்தைகள் தினம்  என்பதால், விஜய் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி குறிப்பு:


ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது குழந்தைகளின் மனது பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல், போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல் தெளிந்த நீரை போல் பரிசுத்தமானது.


நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுகந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம்..! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்து போற்றும் மகிழ்வோம். குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்