சென்னை: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்த நிலையில், அவரது பொதுக்கூட்டமு் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நாளை ரோடு ஷோ நடத்தவும், பொதுக்கூட்டத்தில் பேசவும் அனுமதி கேட்டு, புதுச்சேரி டிஜஜி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையில் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் தண்ணீர் தொட்டி அருகே பொதுக்கூட்டத்தில் பேசவும் 3 நாட்கள் முன்பு புதுச்சேரி டிஜஜி அலுவலகத்தில் தவெகவினர் மனு அளித்திருந்தனர். அத்துடன் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து அனுமதி அளிக்குமாறு கடிதமும் கொடுத்திருந்தனர்.
விஜய்யின் பிரச்சாரத்தின் போது, கரூர் மாவட்டத்தில் நடத்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதை காரணம் காட்டி, விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என டிஐஐி சத்தியசுந்தரம் தெரிவித்திருந்தார். வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடத்த தவெக தரப்பில் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. நாளை விஜய் பொதுக்கூட்டத்தில் மட்டும் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தனது முழுப்பயணத்தையும் விஜய் இன்று ரத்து செய்துள்ளார். விஜய்யின் இந்த திடீர் முடிவால் தவெக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}