சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஐந்து கொள்கைத் தலைவர்களுக்கும், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை விஜய் இன்று திறந்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு வருடமாகிறது. இன்று 2வது ஆண்டின் தொடக்கமாகும். இதையொட்டி கட்சியினருக்கு கடிதம் எழுதி அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார் விஜய்.
இந்த நிலையில் பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் கட்சியின் கொள்கைத் தலைவர்களான வீர மங்கை வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை இன்று நடந்த நிகழ்ச்சியில் விஜய் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

விஜய் தற்போது பனையூர் அலுவலகத்திற்குக் கிட்டத்தட்ட தினசரி வருகிறார். கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். நிர்வாகிகள் நியமனமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் இதுவரை 2 வெளி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஒன்று டாக்டர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா. அதைத் தொடர்ந்து பரந்தூர் போராட்டக் குழுவினரை நேரில் போய்ப் பார்த்தது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் பேசு பொருளாகின.
அடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் தயாராகி வருவதாக தெரிகிறது. அதுதொடர்பான விரிவான திட்டத்தை தவெக விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}