சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஐந்து கொள்கைத் தலைவர்களுக்கும், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை விஜய் இன்று திறந்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு வருடமாகிறது. இன்று 2வது ஆண்டின் தொடக்கமாகும். இதையொட்டி கட்சியினருக்கு கடிதம் எழுதி அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார் விஜய்.
இந்த நிலையில் பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் கட்சியின் கொள்கைத் தலைவர்களான வீர மங்கை வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை இன்று நடந்த நிகழ்ச்சியில் விஜய் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

விஜய் தற்போது பனையூர் அலுவலகத்திற்குக் கிட்டத்தட்ட தினசரி வருகிறார். கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். நிர்வாகிகள் நியமனமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் இதுவரை 2 வெளி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஒன்று டாக்டர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா. அதைத் தொடர்ந்து பரந்தூர் போராட்டக் குழுவினரை நேரில் போய்ப் பார்த்தது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் பேசு பொருளாகின.
அடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் தயாராகி வருவதாக தெரிகிறது. அதுதொடர்பான விரிவான திட்டத்தை தவெக விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல் ...அப்போ சிபிஐ சம்மன் என்னாச்சு?
ஈரான் இறக்குமதி பாதிப்பு...தத்தளிக்கும் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழில்
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
கடவுளால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்.. WOMEN EMPOWERMENT
அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!
கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell
சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
{{comments.comment}}