வந்தவாசியில்.. அடுத்தடுத்து இரண்டு இடங்களில்..2 சிறுமிகளை தாக்கிய தெரு நாய்கள்..!

Mar 04, 2025,11:05 AM IST

திருவண்ணாமலை: வந்தவாசியில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை தெரு நாய்கள் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வந்தவாசி நகராட்சி தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுமிகள், முதியவர்கள், என அனைவரும் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை தெருநாய்கள் கடுமையாக தாக்குகின்றன.


இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களால் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. 




அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து இருவேறு இடங்களில்  தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.


வந்தவாசி கடைத்தெருவில் சிறுமி ஒருவர் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென தெருநாய் கடித்துள்ளது. அதேபோல் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய தனது அம்மாவுடன் நின்று கொண்டிருந்த மற்றொரு சிறுமியும் தெரு நாய்கள் தாக்கியுள்ளன. இந்த நிலையில் தெரு நாய்கள் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்