திருவண்ணாமலை: வந்தவாசியில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை தெரு நாய்கள் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வந்தவாசி நகராட்சி தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுமிகள், முதியவர்கள், என அனைவரும் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை தெருநாய்கள் கடுமையாக தாக்குகின்றன.
இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களால் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.
அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
வந்தவாசி கடைத்தெருவில் சிறுமி ஒருவர் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென தெருநாய் கடித்துள்ளது. அதேபோல் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய தனது அம்மாவுடன் நின்று கொண்டிருந்த மற்றொரு சிறுமியும் தெரு நாய்கள் தாக்கியுள்ளன. இந்த நிலையில் தெரு நாய்கள் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}