ஒரு பார்வை.. இரு கவிதை!

Jan 03, 2026,11:34 AM IST

- பா.பானுமதி 


மதுரையைச் சேர்ந்த ஆசிரியை பா. பானுமதி தீட்டிய இரு கவிதைகள்.. கவிதை குட்டியாக இருந்தாலும்.. கருத்து கெட்டியாக இருக்கும்.. நறுக்கென்று நாலு வரியில் நறுக்கு தெறித்தாற் போல நயமான கருத்துக்கள்.. படித்துப் பாருங்கள்.


செவிலியர்கள் 


கோவிலில் பறக்கும் 

வெண் புறாக்கள் 

மருத்துவமனையில் பறக்கும்

பெண் புறாக்கள் 




தாயின் நகல் தன்னலமற்ற 

அகல் இல்லை 

இரவு பகல் இடித்து விரட்டும் 

இகல்


பயணம் 


சிறகு முளைக்க வைக்கும் 

சிந்தனைகளில் பறக்க வைக்கும் 

புத்துணர்வு பெருகித்தெறிக்கும் 

பூவாய் புன்னகை பிறக்கும் 


ரசனைகள் மெல்ல விழிக்கும் 

நேசம் நெஞ்சில் துளிர்க்கும் 

ஓய்வை ஒய்யாரமாக்கும்

ஆய்வுக்கூட சிறிதாய் நடக்கும் 


பயணங்களில் பங்கு கொள் 

தோரணமாய் போட்டு அழைக்கும் 

மனதிற்கு இதம் தரும் பயணத்தை 

மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என 

பழக்கப்படுத்திக் கொள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தில்லைவாழ் அந்தணர்கள் வரலாறு.. 63 நாயன்மார்கள் வரலாறு (பகுதி 2)

news

ஆசிரியர் இன்றி அமையுமா கல்வி?

news

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை: மேயர் பிரியா அறிவிப்பு

news

ஏன் இத்தனை செயற்கை கருத்தரிப்பு மையங்கள்.?

news

அமீத் ஷா பெயரைச் சொல்லி மாணிக்கம் தாகூர் போட்ட டிவீட்.. கடைசி வரி அன்டர்லைன்!

news

உதவித்தொகை கேட்டால் தடியடியா?வீதியில் அலைகழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

news

இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்

news

தொடர்ந்து 4வது நாளாக சரிந்து வரும் தங்கம் விலை: இதோ இன்றைய விலை நிலவரம்!

news

தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல்... திமுக, அதிமுக கூட்டணிகளை முறைப்படுத்த உதவுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்