ஒரு பார்வை.. இரு கவிதை!

Jan 03, 2026,11:34 AM IST

- பா.பானுமதி 


மதுரையைச் சேர்ந்த ஆசிரியை பா. பானுமதி தீட்டிய இரு கவிதைகள்.. கவிதை குட்டியாக இருந்தாலும்.. கருத்து கெட்டியாக இருக்கும்.. நறுக்கென்று நாலு வரியில் நறுக்கு தெறித்தாற் போல நயமான கருத்துக்கள்.. படித்துப் பாருங்கள்.


செவிலியர்கள் 


கோவிலில் பறக்கும் 

வெண் புறாக்கள் 

மருத்துவமனையில் பறக்கும்

பெண் புறாக்கள் 




தாயின் நகல் தன்னலமற்ற 

அகல் இல்லை 

இரவு பகல் இடித்து விரட்டும் 

இகல்


பயணம் 


சிறகு முளைக்க வைக்கும் 

சிந்தனைகளில் பறக்க வைக்கும் 

புத்துணர்வு பெருகித்தெறிக்கும் 

பூவாய் புன்னகை பிறக்கும் 


ரசனைகள் மெல்ல விழிக்கும் 

நேசம் நெஞ்சில் துளிர்க்கும் 

ஓய்வை ஒய்யாரமாக்கும்

ஆய்வுக்கூட சிறிதாய் நடக்கும் 


பயணங்களில் பங்கு கொள் 

தோரணமாய் போட்டு அழைக்கும் 

மனதிற்கு இதம் தரும் பயணத்தை 

மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என 

பழக்கப்படுத்திக் கொள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்