ஒரு பார்வை.. இரு கவிதை!

Jan 03, 2026,11:34 AM IST

- பா.பானுமதி 


மதுரையைச் சேர்ந்த ஆசிரியை பா. பானுமதி தீட்டிய இரு கவிதைகள்.. கவிதை குட்டியாக இருந்தாலும்.. கருத்து கெட்டியாக இருக்கும்.. நறுக்கென்று நாலு வரியில் நறுக்கு தெறித்தாற் போல நயமான கருத்துக்கள்.. படித்துப் பாருங்கள்.


செவிலியர்கள் 


கோவிலில் பறக்கும் 

வெண் புறாக்கள் 

மருத்துவமனையில் பறக்கும்

பெண் புறாக்கள் 




தாயின் நகல் தன்னலமற்ற 

அகல் இல்லை 

இரவு பகல் இடித்து விரட்டும் 

இகல்


பயணம் 


சிறகு முளைக்க வைக்கும் 

சிந்தனைகளில் பறக்க வைக்கும் 

புத்துணர்வு பெருகித்தெறிக்கும் 

பூவாய் புன்னகை பிறக்கும் 


ரசனைகள் மெல்ல விழிக்கும் 

நேசம் நெஞ்சில் துளிர்க்கும் 

ஓய்வை ஒய்யாரமாக்கும்

ஆய்வுக்கூட சிறிதாய் நடக்கும் 


பயணங்களில் பங்கு கொள் 

தோரணமாய் போட்டு அழைக்கும் 

மனதிற்கு இதம் தரும் பயணத்தை 

மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என 

பழக்கப்படுத்திக் கொள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்