திருவள்ளூர் அருகே .. தண்டவாளத்தைக் கடந்தபோது.. மின்சார ரயில் மோதி 3 பேர் பலி!

Nov 19, 2023,12:27 PM IST
சென்னை: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த 3 பேர் மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

கொல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் பெண்கள் ஆவர். வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் அதிகம். பலமுறை இப்பகுதியில் விபத்து ஏற்பட்டும் கூட மக்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. உயிரைப் பணயம் வைத்து பலரும் தண்டவாளத்தைக் கடப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்த அவலத்தைப் போக்குவதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் தற்போது அது பாதியிலேயே நிற்கிறது. இதனால் மக்களின் அவலமும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் இன்று ஒரு விபரீதம் நடந்துள்ளது.




இன்று காலை சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியை கடந்தபோது 3 பேர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 2 பேர் பெண்கள் ஆவர். 3 பேரின் உடல்களும் மிக மோசமாக சிதறிப் போய் விட்டன. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் சிதிலமடைந்து விட்டன.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உடல் பாகங்களைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரயில் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்