காசியில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்.. விமானத்தில் அழைத்து வர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

Feb 20, 2025,10:26 AM IST

சென்னை: வாரணாசி  ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்குச் செல்லும் கூட்டம் அதிகரித்ததால், முன்பதிவு செய்து இருந்தும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல்  தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விமான மூலம் சென்னைக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 


வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 16, 17, 18, ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை முடித்துவிட்டு இருபதாம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவிரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், வாரணாசி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் ஏசி பெட்டிகளையும் கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர். 




இதனால், முன்பதிவு செய்து இருந்தும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி வீரர்கள் வாரணாசி ரயில் நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.இதனைதொடர்ந்து தமிழக அரசு எங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமான மூலம் சென்னை அழைத்து வர உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் மேம்பாட்டு ஆணையம் சார்பில் தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்