காசியில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்.. விமானத்தில் அழைத்து வர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

Feb 20, 2025,10:26 AM IST

சென்னை: வாரணாசி  ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்குச் செல்லும் கூட்டம் அதிகரித்ததால், முன்பதிவு செய்து இருந்தும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல்  தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விமான மூலம் சென்னைக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 


வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 16, 17, 18, ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை முடித்துவிட்டு இருபதாம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவிரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், வாரணாசி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் ஏசி பெட்டிகளையும் கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர். 




இதனால், முன்பதிவு செய்து இருந்தும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி வீரர்கள் வாரணாசி ரயில் நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.இதனைதொடர்ந்து தமிழக அரசு எங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமான மூலம் சென்னை அழைத்து வர உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் மேம்பாட்டு ஆணையம் சார்பில் தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

news

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

news

ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்