காசியில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்.. விமானத்தில் அழைத்து வர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

Feb 20, 2025,10:26 AM IST

சென்னை: வாரணாசி  ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்குச் செல்லும் கூட்டம் அதிகரித்ததால், முன்பதிவு செய்து இருந்தும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல்  தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விமான மூலம் சென்னைக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 


வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 16, 17, 18, ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை முடித்துவிட்டு இருபதாம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவிரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், வாரணாசி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் ஏசி பெட்டிகளையும் கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர். 




இதனால், முன்பதிவு செய்து இருந்தும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி வீரர்கள் வாரணாசி ரயில் நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.இதனைதொடர்ந்து தமிழக அரசு எங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமான மூலம் சென்னை அழைத்து வர உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் மேம்பாட்டு ஆணையம் சார்பில் தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!

news

2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்

news

வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்