ஆமதாபாத்: இது வெறும் டிரெய்லர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நேற்று ஸ்ரீநகர் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து பேசினேன். இன்று விமானப்படை வீரர்களுடன் பேசுகின்றேன். இன்று இங்கு இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் . உங்களின் தைரியத்திற்கு தலைவணங்குகிறேன்.
1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரன நமது வெற்றிக்கு புஜ் விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது. இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு சாட்சியாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் பெருமைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமாதாக இருந்தது.

மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. இனிமேல் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிவடையவில்லை நீங்கள் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர்தான். சரியான நேரம் வரும் போது அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு படத்தையும் நாம் இந்த உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் இருக்கிறது என்று பேசியுள்ளார்.
உண்மையின் எதிரொலி!
தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது
தேனும் தேனீயும்.. வாடும் மலரும்.. Bee and flower
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்
எல்லா மதத்திலும் அன்பு உண்டு.. அன்புக்கு.. Yet love has no religion
ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா!
கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!
எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
{{comments.comment}}