இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

May 16, 2025,05:46 PM IST

ஆமதாபாத்: இது வெறும் டிரெய்லர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களை பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நேற்று ஸ்ரீநகர் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து பேசினேன். இன்று விமானப்படை வீரர்களுடன்  பேசுகின்றேன். இன்று இங்கு இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் . உங்களின் தைரியத்திற்கு தலைவணங்குகிறேன்.


1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரன நமது வெற்றிக்கு புஜ்  விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது. இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு சாட்சியாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் பெருமைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமாதாக இருந்தது.




மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. இனிமேல் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும்.


ஆபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிவடையவில்லை நீங்கள் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர்தான். சரியான நேரம் வரும் போது அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு படத்தையும் நாம் இந்த  உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!

news

ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

news

ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

news

இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

news

Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!

news

நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!

news

ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை

news

தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்