இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

May 16, 2025,05:46 PM IST

ஆமதாபாத்: இது வெறும் டிரெய்லர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களை பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நேற்று ஸ்ரீநகர் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து பேசினேன். இன்று விமானப்படை வீரர்களுடன்  பேசுகின்றேன். இன்று இங்கு இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் . உங்களின் தைரியத்திற்கு தலைவணங்குகிறேன்.


1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரன நமது வெற்றிக்கு புஜ்  விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது. இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு சாட்சியாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் பெருமைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமாதாக இருந்தது.




மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. இனிமேல் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும்.


ஆபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிவடையவில்லை நீங்கள் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர்தான். சரியான நேரம் வரும் போது அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு படத்தையும் நாம் இந்த  உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்