திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜகவின் புதிய ராஜ்யசபா உறுப்பினரான சி.சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்கு பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லாமல்தான் இருக்கிறார் சுரேஷ் கோபி. அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது மீண்டும் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி.
ஞாயிற்றுக்கிழமை அன்று கண்ணூரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், சதானந்தன் மாஸ்டரின் ராஜ்யசபா நியமனம் வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டார். நான் மனப்பூர்வமாக சொல்கிறேன், என்னை நீக்கிவிட்டு சதானந்தன் மாஸ்டரை (மத்திய) அமைச்சராக்க வேண்டும். இது கேரளாவின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக இருக்கும் சுரேஷ் கோபி, சதானந்தன் மாஸ்டரின் எம்.பி. அலுவலகம் விரைவில் அமைச்சர் அலுவலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். சுரேஷ் கோபி மேலும் பேசுகையில், நான் கட்சியில் அக்டோபர் 2016 இல் சேர்ந்ததாகவும், மாநிலத்திலேயே இளைய பாஜக உறுப்பினர்களில் ஒருவர் என்றும் கூறினார். லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவுக்கு அங்கீகாரமாக கட்சி தன்னை மத்திய அமைச்சராக்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுக்கொடுத்து நான் ஒருபோதும் அமைச்சராக விரும்பவில்லை. சமீப காலமாக எனது வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
நிறைய படிச்சேன்.. எனது பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்கிறேன்.. அசத்தும் சங்கீதா
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
சுகந்தி மனசில் மாற்றம்... புது வசந்தம் (3)
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ஜெயிலர் 2.. பிரமாண்ட ஆக்ஷன் திருவிழா.. ரஜினியுடன் இன்னொரு விருந்தும் ரெடியாகப் போகுதாம்!
என்னை விட்ருங்க... நான் விலகிக்கிறேன்.. சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க.. சுரேஷ் கோபி
{{comments.comment}}