என்னை விட்ருங்க... நான் விலகிக்கிறேன்.. சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க.. சுரேஷ் கோபி

Oct 13, 2025,12:30 PM IST

திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜகவின் புதிய ராஜ்யசபா உறுப்பினரான சி.சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்கு பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.


ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லாமல்தான் இருக்கிறார் சுரேஷ் கோபி. அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது மீண்டும் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி.


ஞாயிற்றுக்கிழமை அன்று கண்ணூரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், சதானந்தன் மாஸ்டரின் ராஜ்யசபா நியமனம் வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டார். நான் மனப்பூர்வமாக சொல்கிறேன், என்னை நீக்கிவிட்டு சதானந்தன் மாஸ்டரை (மத்திய) அமைச்சராக்க வேண்டும். இது கேரளாவின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.




பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக இருக்கும் சுரேஷ் கோபி, சதானந்தன் மாஸ்டரின் எம்.பி. அலுவலகம் விரைவில் அமைச்சர் அலுவலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.  சுரேஷ் கோபி மேலும் பேசுகையில், நான் கட்சியில் அக்டோபர் 2016 இல் சேர்ந்ததாகவும், மாநிலத்திலேயே இளைய பாஜக உறுப்பினர்களில் ஒருவர் என்றும் கூறினார். லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவுக்கு அங்கீகாரமாக கட்சி தன்னை மத்திய அமைச்சராக்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 


எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுக்கொடுத்து நான் ஒருபோதும் அமைச்சராக விரும்பவில்லை. சமீப காலமாக எனது வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்