திருமண வாழ்க்கை போதும்.. கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் நடிகை ஊர்மிளா!

Sep 25, 2024,12:48 PM IST

மும்பை : பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் தனது கணவர் மோக்சின் அக்தர் மிரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தரும்படி கோர்ட்டை அணுகியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.


பிரபல பாலிவுட் நடிகையும், பாலிவுட் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியுமாக இருந்தவர் ஊர்மிளா. ரங்கிலா படத்தின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் ஊர்மிளா. இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்திலும் நடித்துள்ளார். இவர் 2016ம் ஆண்டு மோக்சினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது விவகாரத்து கோரி உள்ளார்.




ஊர்மிளா தனது கணவரை பிரிய முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது வரை அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதே சமயம் விவகாரத்து பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டு, மும்பை கோர்ட்டில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


நன்கு யோசித்து, ஆலோசித்த பிறகே ஊர்மிளா இந்த முடிவை எடுத்ததாகவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பரஸ்பர அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஊர்மிளா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் தொடர்பான போட்டோக்களை பகிர்வதை நிறுத்தி விட்டார். கடைசியாக அவர் 2023ம் ஆண்டு ரம்ஜானுக்கு தான் தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்.


மோக்சின், காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர். இவர் பிரபல மாடலும் கூட. இவரும் ஊர்மிளாவும் முதல் முறையாக 2014ம் ஆண்டு டிசைனர் மணிஷ் மல்கோத்ராவின் உறவினர் வீட்டு திருமணத்தில் தான் சந்தித்து கொண்டனர். அதற்கு பிறகு நெருக்கமாக பழகி வந்த இருவரும் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதலில் இஸ்லாமிய முறைப்படியும், பிறகு அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கிய முறைப்படியும் நடைபெற்றது. 


மோக்சின் சில படங்களிலும் நடித்துள்ளார். பிறகு சினிமாவில் இருந்து விலகி, தொழிலில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஊர்மிளா திவாரி என்ற வெப்சீரிசில் நடித்து வருகிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்