மும்பை : பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் தனது கணவர் மோக்சின் அக்தர் மிரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தரும்படி கோர்ட்டை அணுகியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையும், பாலிவுட் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியுமாக இருந்தவர் ஊர்மிளா. ரங்கிலா படத்தின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் ஊர்மிளா. இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்திலும் நடித்துள்ளார். இவர் 2016ம் ஆண்டு மோக்சினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது விவகாரத்து கோரி உள்ளார்.

ஊர்மிளா தனது கணவரை பிரிய முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது வரை அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதே சமயம் விவகாரத்து பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டு, மும்பை கோர்ட்டில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நன்கு யோசித்து, ஆலோசித்த பிறகே ஊர்மிளா இந்த முடிவை எடுத்ததாகவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பரஸ்பர அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஊர்மிளா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் தொடர்பான போட்டோக்களை பகிர்வதை நிறுத்தி விட்டார். கடைசியாக அவர் 2023ம் ஆண்டு ரம்ஜானுக்கு தான் தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்.
மோக்சின், காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர். இவர் பிரபல மாடலும் கூட. இவரும் ஊர்மிளாவும் முதல் முறையாக 2014ம் ஆண்டு டிசைனர் மணிஷ் மல்கோத்ராவின் உறவினர் வீட்டு திருமணத்தில் தான் சந்தித்து கொண்டனர். அதற்கு பிறகு நெருக்கமாக பழகி வந்த இருவரும் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதலில் இஸ்லாமிய முறைப்படியும், பிறகு அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கிய முறைப்படியும் நடைபெற்றது.
மோக்சின் சில படங்களிலும் நடித்துள்ளார். பிறகு சினிமாவில் இருந்து விலகி, தொழிலில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஊர்மிளா திவாரி என்ற வெப்சீரிசில் நடித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}