அளவுக்கு அதிகமாக.. இன்சுலின் ஊசி போட்டு.. 17 பேர் கொலை.. சைக்கோ நர்ஸுக்கு 760 வருட சிறை!

May 04, 2024,05:14 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக இன்சுலின் ஊசி போட்டு பல நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நர்ஸுக்கு 380 முதல் 760 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த நர்ஸின் செயலால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு உடல் ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023 வரை இந்த கொடூரச் செயலில் இந்த நர்ஸ் ஈடுபட்டுள்ளார். இவரது பெயர் ஹெதர் பிரஸ்டீ. 41 வயதான இவர் பென்சில்வேனியாவைச் சேர்ந்த நர்ஸ் ஆவார். இவர் மீதான புகார்களைத்  தொடர்ந்து ஹெதர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.


இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் தொடரப்பட்டன. அதில், 3 கொலை வழக்குகள், 19 கொலை முயற்சி வழக்குகளில் இவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  22 நோயாளிகளுக்கு இவர் அளவுக்கு அதிகமாக இன்சுலின் போட்டார் என்பது பொதுவான குற்றச்சாட்டாகும். இரவு நேர ஷிப்ட்டில் பணியில் இருந்தபோது இந்த செயலை அவர் செய்துள்ளார். இவரால் அதீத அளவில் இன்சுலின் போடப்பட்ட நோயாளிகளில் சிலர் உடனடியாக இறறந்துள்ளனர். சிலர் உயிருக்குப் போராடி இறந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயது உடையவர்கள் ஆவர்.


இன்சுலினை அளவுக்கு அதிகமாக போட்டால் என்னாகும்?




அளவுக்கு அதிகமாக இன்சுலின் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில்  சர்க்கரை அளவு வெகு வேகமாக குறைந்து போய் விடும். இதனால் லோ சுகர் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும். இதயத்துடிப்பும் தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் மாரடைப்பும், இதய செயலிழப்பும் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்.


சம்பந்தப்பட்ட நர்ஸ் மன ரீதியாக மனிதர்களை வெறுப்பவராக இருந்துள்ளார். குறிப்பாக நோயாளிகளை வெறுப்பவராக இருந்துள்ளார். தனது தாயாருக்கு இவர் பலமுறை எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளாராம். அதில், எனக்கு நோயாளிகளைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. அப்படியே கொன்று விட வேண்டும் என்று தோன்றுகிறது.  இவர்கள் எல்லாம் இருந்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று கூறியுள்ளார் ஹெதர்.


தனது சக ஊழியர்களிடமும் கூட இதே போலவே அவர் பேசி வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கும் புகார் போயுள்ளதாம். இந்த பெண் குறித்து பாதிக்கப்பட்ட ஒருவரின்  குடும்ப உறுப்பினர் கூறுகையில் இவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் கிடையாது. பிசாசுக் குணம் நிரம்பியவராக இருந்திருக்கிறார். அவரது முகத்தில் நான் சாத்தானைப் பார்த்தேன். எனது தந்தையை கொடூரமாக கொன்று விட்டார் என்று குமுறியுள்ளார்.


நோயாளிகளை நர்ஸ் ஒருவர் கொல்வது அமெரிக்காவில் இது முதல் முறை அல்ல.  இதற்கு முன்பு நியூ ஜெர்சியில், சார்ல் குல்லன் என்ற ஆண் நர்ஸ், 29 நோயாளிகளைக் கொன்று சிக்கினார்.  அதேபோல டெக்ஸாஸைச் சேர்ந்த வில்லியம் டேவிஸ் என்ற ஆண் நர்ஸ், நான்கு நோயாளிகளுக்கு அவர்களது ரத்த நாளத்தில் காற்றை  செலுத்தி கொலை செய்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

news

ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?

news

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு

news

"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!

news

திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்

news

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

news

திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!

news

‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

news

NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்