வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ. குறு வீடியோக்களை எடுத்து இதில் வெளியிடலாம். இந்தியாவிலும் ஒரு காலத்தில் இது சக்கை போடு போட்டது. ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா என பலரும் இதன் மூலம் வெளியுலகுக்குத் தெரிய வந்தனர். யாரைப் பார்த்தாலும் டிக்டாக் பைத்தியங்களாகவே சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. பின்னர் இதை மத்திய அரசு தடை விதித்து விட்டது.
பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தை தாய் நிறுவனமாக கொண்டது டிக்டாக். டிக்டாக் அமெரிக்காவில் நிறைய பயனாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், டிக் டாக் செயலி மூலமாக தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களை சீனாவிடம் கொடுக்கிறது என பைட்டான்ஸ் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவன பயனாளர்களின் அனுமதி இன்றி ரகசியமாக தகவல்களை எடுக்கிறது என வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்த மிஸ்டி ஹாங் என்னும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி தான் டிக்டாக் கை பதிவிறக்கம் செய்ததாகவும் ஆனால் அதில், எந்த கணக்கும் தொடங்கவில்லை என வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில, சில மாதங்களில் தன்னுடைய பெயரில் நிறுவனமே கணக்கு தொடங்கியிருந்ததாகவும் தான் பதிவிடாமல் வைத்திருந்த வீடியோ காட்சியை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது. இதனால் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் பைடான்ஸ் நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்க வேண்டும். இல்லாவிட்டால், அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}