- வீ. தமிழ்ச்செல்வி
நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தூரத்தில் இருந்து வரும் ஒரு முகம். எனக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்று தோன்றியது. பார்த்தவுடன் எங்கும் பரவசம் குடி கொண்டது.
அந்த முகம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டே இருந்தது. ஒரு வித பதட்டமா இல்ல சந்தோஷமா ஏதோ ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டால் அவளுக்கு நம்மை நினைவில் இருக்குமா நாம்தான் என்று நம்மை அறிந்திருப்பாலோ என்று பல கோடி எண்ணங்கள் ஒரு மின்னல் போல் எனக்குள் வந்து சென்று விட்டது.

அவளும் நான் நிற்கும் அதே இடத்திற்கு வந்து நின்று நீ சுதா தானே என்று அழைத்த போது என்னுள் இருந்த அத்தனை ஐயங்களும் ஒரு நிலைக்கு வந்தது. நானும் நிலா நீ இங்க என்ன பண்ற கேட்டபொழுது, நான் இங்குதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன் அவள் பதில் கூறிக்கொண்டே அவளின் நண்பர்களிடம் கைசைத்து கொண்டிருந்தாள்.
சரி வா உக்காந்து டீ சாப்பிடலாம் என்று கூறினேன். இல்லை எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என் நண்பர்கள் காத்திருக்கிறார்கள்.. என்று சொல்லி சென்று விட்டாள்.. நானும் அவளின் நெருங்கிய தோழிதான் என்பதை மறந்து விட்டு!!!
(தமிழ்ச்செல்வி வீ, GHS, ANGUCHETTIPALAYAM)
Short Story: கண்ணாளனே
வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதி: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஓடக்கரையில் நா இருக்க!
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி மிரட்டியதாக.. யூடியூபர் IPDS திருநாவுக்கரசு, 2 திமுகவினர்அதிரடி கைது
தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?
மூவரி கவிதைகள்.. சிறுமியின் சிரிப்பில் ஜவ்வு மிட்டாய் காளியின் நாவு
மருத்துவர் தினம்.. டாக்டர் தான் என் தெய்வம்!
சிந்தனைச் சிதறல்.. விதையிட்டு வளர்த்தவருக்கே முதலுரிமை!
{{comments.comment}}