சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை வைகோ மற்றும் துரை வைகோ சந்தித்தனர்.
கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்று கிழமை வீடு திரும்பினார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சென்று வைகோ மற்றும் துரை வைகோ நலம் விசாரித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டார். கவின் கொலை வழக்கில் காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். 2026ல் கூட்டணி அரசு அமையாது. 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.

பெரியார் மற்றும் அண்ணாவின் மண்ணில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக போன்ற ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இடமில்லை. அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். முதல்வரின் சுற்றுப்பயணத்தில் மக்கள் திரளானோர் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். திமுக கூட்டணியில் தேமுதிக வந்தால் மதிமுக வெளியேறும் என அப்பட்டமாக செய்தி பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
{{comments.comment}}