- தி. மீரா
மார்கழி மாத ஏகாதசி.. டிசம்பர் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. மார்கழி மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்த நாள் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்படும். அந்த வாசல் வழியாகச் செல்வோர் வைகுண்ட பதவி பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த தினத்தில் திருமால் (விஷ்ணு) தன் பக்தர்களுக்கு மோட்ச அருள் வழங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், முன்னாள் பாவங்கள் நீங்கி மனம் தூய்மையடையும் என்று நம்பப்படுகிறது.

உண்ணாவிரதம் அல்லது ஒருவேளை உணவு, நாமஜபம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் போன்ற திவ்யதேசங்களில் திருவாய்மொழி பத்துநாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.
உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு இறைவனை அடைவதற்கான ஆன்மீக வாயிலாக இந்த நாள் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு தானம், அன்னதானம், சேவை செய்வது மிகுந்த புண்ணியம் தரும். இந்த நாளில் பிரார்த்தனை செய்வதால் மன அமைதி, குடும்ப நலம், வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி என்பது வைணவ சமயத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும். “வைகுண்ட வாசல் வழியே நடக்கும் பக்தன், வாழ்வின் இருள் கடந்து ஒளியை அடைவான்”
(பாவலர் முனைவர் தி.மீரா, ஈரோடு)
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
{{comments.comment}}