- தி. மீரா
மார்கழி மாத ஏகாதசி.. டிசம்பர் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. மார்கழி மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்த நாள் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்படும். அந்த வாசல் வழியாகச் செல்வோர் வைகுண்ட பதவி பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த தினத்தில் திருமால் (விஷ்ணு) தன் பக்தர்களுக்கு மோட்ச அருள் வழங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், முன்னாள் பாவங்கள் நீங்கி மனம் தூய்மையடையும் என்று நம்பப்படுகிறது.

உண்ணாவிரதம் அல்லது ஒருவேளை உணவு, நாமஜபம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் போன்ற திவ்யதேசங்களில் திருவாய்மொழி பத்துநாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.
உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு இறைவனை அடைவதற்கான ஆன்மீக வாயிலாக இந்த நாள் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு தானம், அன்னதானம், சேவை செய்வது மிகுந்த புண்ணியம் தரும். இந்த நாளில் பிரார்த்தனை செய்வதால் மன அமைதி, குடும்ப நலம், வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி என்பது வைணவ சமயத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும். “வைகுண்ட வாசல் வழியே நடக்கும் பக்தன், வாழ்வின் இருள் கடந்து ஒளியை அடைவான்”
(பாவலர் முனைவர் தி.மீரா, ஈரோடு)
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}