- தி. மீரா
மார்கழி மாத ஏகாதசி.. டிசம்பர் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. மார்கழி மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்த நாள் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்படும். அந்த வாசல் வழியாகச் செல்வோர் வைகுண்ட பதவி பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த தினத்தில் திருமால் (விஷ்ணு) தன் பக்தர்களுக்கு மோட்ச அருள் வழங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், முன்னாள் பாவங்கள் நீங்கி மனம் தூய்மையடையும் என்று நம்பப்படுகிறது.

உண்ணாவிரதம் அல்லது ஒருவேளை உணவு, நாமஜபம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் போன்ற திவ்யதேசங்களில் திருவாய்மொழி பத்துநாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.
உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு இறைவனை அடைவதற்கான ஆன்மீக வாயிலாக இந்த நாள் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு தானம், அன்னதானம், சேவை செய்வது மிகுந்த புண்ணியம் தரும். இந்த நாளில் பிரார்த்தனை செய்வதால் மன அமைதி, குடும்ப நலம், வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி என்பது வைணவ சமயத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும். “வைகுண்ட வாசல் வழியே நடக்கும் பக்தன், வாழ்வின் இருள் கடந்து ஒளியை அடைவான்”
(பாவலர் முனைவர் தி.மீரா, ஈரோடு)
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி
என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!
2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா
"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை
மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை
நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
{{comments.comment}}