சென்னை: எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாதிக்க செய்திட கூடாது. அதற்கேற்ப அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது,
அரசியலமைப்பு தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக நான் மாண்புமிகு முதல்வரின் அனுமதியோடு விடைபெறுகிறேன். நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற நிலையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார். தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எண்ணிக்கை வரையறு எவ்வளவு முக்கியமோ அதைப்போல தொகுதிகளில் எல்லை வரையறையும் முக்கியமானது. இந்த எல்லை வரையறை செய்வதில் ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் ஆகியோர் சிதறடிக்கப்படும் வகையில் எல்லை மறுசீரமைப்பு நடந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி வருங்காலங்களில் அவ்வாறு சமூக பிரிவினர்களின் வாக்குகளை சிதறடிக்காத வகையில் எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிகின்றோம்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாநில அரசியலே தீர்மானித்துக் கொள்ளும். அதே வேளையில் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்றைக்கு இருக்கின்ற அடிப்படையிலேயே தொடர வேண்டும் என்கிற கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன் வைத்திருக்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் முன்னெடுப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாதிக்க செய்திட கூடாது. அதற்கேற்ப அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த அடிப்படையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறது. முதல்வரின் முன் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடிய வகையில் கருத்தை தெரிவித்தது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.
அப்படியெல்லாம் இன்னிக்கு மாறாது. தமிழ்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது என பொத்தாம் பொதுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்திய நிகழ்வில் கூறிய பாஜக இன்று இந்த கூட்டத்தை தவிர்த்து இருக்கிறது. இது திமுக சொன்ன கருத்து அல்ல. அரசியல் வல்லுநர்கள் ஏற்கனவே இதுகுறித்து விவாதித்த கருத்துதான். திமுக இவ்வாறு கற்பனை செய்து அரசியல் செய்யவில்லை. திமுக இதனை பேசுவதற்கு முன்னதாகவே ஓராண்டுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய வெல்லும் ஜனநாயக மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம் என கூறியுள்ளார்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}