சென்னை: எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாதிக்க செய்திட கூடாது. அதற்கேற்ப அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது,
அரசியலமைப்பு தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக நான் மாண்புமிகு முதல்வரின் அனுமதியோடு விடைபெறுகிறேன். நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற நிலையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார். தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எண்ணிக்கை வரையறு எவ்வளவு முக்கியமோ அதைப்போல தொகுதிகளில் எல்லை வரையறையும் முக்கியமானது. இந்த எல்லை வரையறை செய்வதில் ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் ஆகியோர் சிதறடிக்கப்படும் வகையில் எல்லை மறுசீரமைப்பு நடந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி வருங்காலங்களில் அவ்வாறு சமூக பிரிவினர்களின் வாக்குகளை சிதறடிக்காத வகையில் எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிகின்றோம்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாநில அரசியலே தீர்மானித்துக் கொள்ளும். அதே வேளையில் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்றைக்கு இருக்கின்ற அடிப்படையிலேயே தொடர வேண்டும் என்கிற கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன் வைத்திருக்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் முன்னெடுப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாதிக்க செய்திட கூடாது. அதற்கேற்ப அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த அடிப்படையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறது. முதல்வரின் முன் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடிய வகையில் கருத்தை தெரிவித்தது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.
அப்படியெல்லாம் இன்னிக்கு மாறாது. தமிழ்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது என பொத்தாம் பொதுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்திய நிகழ்வில் கூறிய பாஜக இன்று இந்த கூட்டத்தை தவிர்த்து இருக்கிறது. இது திமுக சொன்ன கருத்து அல்ல. அரசியல் வல்லுநர்கள் ஏற்கனவே இதுகுறித்து விவாதித்த கருத்துதான். திமுக இவ்வாறு கற்பனை செய்து அரசியல் செய்யவில்லை. திமுக இதனை பேசுவதற்கு முன்னதாகவே ஓராண்டுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய வெல்லும் ஜனநாயக மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம் என கூறியுள்ளார்.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
வேலின் அருளால் தைப்பூசத்தில் ஏற்படும் பலன்கள்!
சமாதானம்
{{comments.comment}}