வீர தீர சூரன் படம்:ஓடிடி உரிமம் தொடர்பான பிரச்சனை முடிவு.. இன்று மாலைக்குள் படம் வெளியாகும் என தகவல்

Mar 27, 2025,04:18 PM IST

சென்னை:   ஓடிடி உரிமம்  தொடர்பான வழக்கில் நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம்  வெளியிட, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், அனைத்து பிரச்சனைகளும் முடிக்கப்பட்டு இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


 சித்தா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன் திரைப்படம். இவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் டிரைலரே ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்தது. இதனால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  




ஏனெனில் ஏற்கனவே இப்படம் ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அஜித்தின்  விடாமுயற்சி படத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதுமே முதல் பாகம் வெளியீடு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வீர தீர சூரன் திரைப்படத்தின்   2 ஆம் பாகம் இன்று காலை வெளியாக இருந்தது.


ஆனால் அறிவித்தபடி இப்படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதாவது  படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படும்  முன்னதாகவே ரிலீஸ் தேதியை அறிவித்தால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது பி4யு முதலீட்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


மேலும் படத்தை தயாரித்த ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ரியாஷிபு, 48 மணி நேரத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி டெபாசிட் செய்ய வேண்டுமெனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்த நிலையில் வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மேலும் 4 வாரங்கள் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால், இப்படத்தின் மீதான அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டதால் இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்