சென்னை: ஓடிடி உரிமம் தொடர்பான வழக்கில் நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வெளியிட, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், அனைத்து பிரச்சனைகளும் முடிக்கப்பட்டு இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சித்தா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன் திரைப்படம். இவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் டிரைலரே ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்தது. இதனால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஏனெனில் ஏற்கனவே இப்படம் ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அஜித்தின் விடாமுயற்சி படத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதுமே முதல் பாகம் வெளியீடு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வீர தீர சூரன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் இன்று காலை வெளியாக இருந்தது.
ஆனால் அறிவித்தபடி இப்படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதாவது படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்னதாகவே ரிலீஸ் தேதியை அறிவித்தால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது பி4யு முதலீட்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் படத்தை தயாரித்த ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ரியாஷிபு, 48 மணி நேரத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி டெபாசிட் செய்ய வேண்டுமெனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மேலும் 4 வாரங்கள் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால், இப்படத்தின் மீதான அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டதால் இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}