டெல்லி: நேபாள நாட்டில், திபெத் எல்லைப் பகுதியில் மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 6.35 மணியளவில் நேபாள நாட்டுக்கும், திபெத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியான லோபுச்சே என்ற இடத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் நேபாள நாடு அதிர்ந்தது. அதேபோல இந்தியாவிலும் டெல்லி, பீகாரின் பல பகுதிகள் நில அதிர்ச்சியை உணர்ந்தன.
பீகாரில் பல இடங்களில் வீடுகள், குடியிருப்புகள் ஆட்டம் கண்டன. இருப்பினும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதேசமயம், நேபாளத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பூகம்பம் ஏற்பட்ட லொபுச்சே பகுதியானது நேபாளத்தில் உள்ளது. காத்மாண்டுவிலிருந்து 150 கிலோமீட்டர் கிழக்கே, குபு பனி மலைப் பகுதியில் இது அமைந்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் தரை முகாமிலிருந்து வெறும் எட்டரை கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள திபெத்துக்குச் சொந்தமான ஜிஜாங் என்ற இடமும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}