நேபாளத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் பூகம்பம்.. பலர் பலி.. டெல்லியும் ஆடியதால் மக்கள் அதிர்ச்சி

Jan 07, 2025,06:01 PM IST

டெல்லி: நேபாள நாட்டில், திபெத் எல்லைப் பகுதியில் மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்திய நேரப்படி இன்று காலை 6.35 மணியளவில் நேபாள நாட்டுக்கும், திபெத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியான லோபுச்சே என்ற இடத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் நேபாள நாடு அதிர்ந்தது. அதேபோல இந்தியாவிலும் டெல்லி, பீகாரின் பல பகுதிகள் நில அதிர்ச்சியை உணர்ந்தன.




பீகாரில் பல இடங்களில் வீடுகள், குடியிருப்புகள் ஆட்டம் கண்டன. இருப்பினும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதேசமயம், நேபாளத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


பூகம்பம் ஏற்பட்ட லொபுச்சே பகுதியானது நேபாளத்தில் உள்ளது. காத்மாண்டுவிலிருந்து 150 கிலோமீட்டர் கிழக்கே, குபு பனி மலைப் பகுதியில் இது அமைந்துள்ளது.  எவரெஸ்ட் சிகரத்தின் தரை முகாமிலிருந்து வெறும் எட்டரை கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள திபெத்துக்குச் சொந்தமான ஜிஜாங் என்ற இடமும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்