டெல்லி: நேபாள நாட்டில், திபெத் எல்லைப் பகுதியில் மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 6.35 மணியளவில் நேபாள நாட்டுக்கும், திபெத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியான லோபுச்சே என்ற இடத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் நேபாள நாடு அதிர்ந்தது. அதேபோல இந்தியாவிலும் டெல்லி, பீகாரின் பல பகுதிகள் நில அதிர்ச்சியை உணர்ந்தன.

பீகாரில் பல இடங்களில் வீடுகள், குடியிருப்புகள் ஆட்டம் கண்டன. இருப்பினும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதேசமயம், நேபாளத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பூகம்பம் ஏற்பட்ட லொபுச்சே பகுதியானது நேபாளத்தில் உள்ளது. காத்மாண்டுவிலிருந்து 150 கிலோமீட்டர் கிழக்கே, குபு பனி மலைப் பகுதியில் இது அமைந்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் தரை முகாமிலிருந்து வெறும் எட்டரை கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள திபெத்துக்குச் சொந்தமான ஜிஜாங் என்ற இடமும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கொளத்தூரில் காட்டிய வீரியத்தப் பார்த்துமா இப்படிப் பேசுகிறீர்கள்.. திமுகவுக்கு முதல்வர் விஜய் பதிலடி
திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!
பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க - மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}