டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாட்டின் 16வது துணை குடியரசு தலைவராக இருந்து ஜெகதீப் தன்கர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் (68), இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மோடி முன்னிலையில் பாஜ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கலின்போது மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சரத்பவார், திருச்சி சிவா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி உறுதியாகி உள்ளது.
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
நட்பு எனும் கவசம்
ஆச்சரியம் ஆனால் உண்மை
கற்ற கல்வி உதவுமா?
கலகலக்க வைக்கும் கிராமத்து விளையாட்டுகள்.. அது ஒரு பொற்காலம்!
"என்னை மூச்சடைக்க வைக்காதே அர்ஜூன்".. (நீ மழை.. 5)
T20 World Cup: ஈடன் கார்டனை அதிர விட்ட சேட்டன் சஞ்சு.. செம ஆட்டம்.. செமி பைனலில் இந்தியா!
Iran Flashback: அயதுல்லா கொமேனி யார் தெரியுமா?.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள லிங்க்!
25 சீட் கொடுக்க முன்வந்தது திமுக.. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.. கிரிஷ் சோடங்கர்
{{comments.comment}}