டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாட்டின் 16வது துணை குடியரசு தலைவராக இருந்து ஜெகதீப் தன்கர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் (68), இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
பிரதமர் மோடி முன்னிலையில் பாஜ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கலின்போது மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சரத்பவார், திருச்சி சிவா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி உறுதியாகி உள்ளது.
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
{{comments.comment}}