வெளியானது விடாமுயற்சி.. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக் கோலம்.. ரசிகர்கள் உற்சாகம்!

Feb 06, 2025,06:46 PM IST

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ள நிலையில், முதல் காட்சியைக் காண ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணியில் ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக படமாக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரெஜினா கான்சென்ட்ரா மற்றும் நடிகர் அர்ஜுன்,ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 




விடாமுயற்சி திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இப்படம் எப்போது வெளியாகும் என படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையே படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதுடன் படத்தின் ஃப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உலா வந்தனர்.


இந்த நிலையில் 200 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில்  பிப்ரவரி 6ஆம் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திரையரங்கு முன்பாக உள்ள மிகப்பெரிய ராட்சத பேனருக்கு மாலை அணிவித்து டிரம்ஸ் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன், திருவிழா போல படத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 


சென்னை ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காணச் சென்ற நடிகர் ஆரவ் விடாமுயற்சி படத்தை உற்சாகமாக கண்டுகளித்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவிட்டு சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதில் ரசிகர்கள் ஏகே ஏகே என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அதேபோல் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் விடாமுயற்சி படத்தை பார்க்க வந்த போது இப்படம் பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் இதனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. அஜித் சாருக்காக பேனர் போஸ்டர் ஒட்டிய பையன் நான் இப்பொழுது அவருடைய படத்தை இயக்குகிறேன். இதைவிட என் வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷம் என்ற ஒன்று  கிடையாது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


ஆந்திரா, கர்நாடகா மற்றும் அமெரிக்காவிலும்  விடாமுயற்சி படம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள அஜீத் படம் என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்