எண்ணம் போல் வாழ்க்கை!

Feb 23, 2026,11:41 AM IST

- சி.குமரேஸ்வரி


எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை சிறக்கும்,

இனிமை மலர இதயம் மலரும்.

மனது நல்லதை மட்டுமே நினைக்கட்டும்,

பொறாமை, கோபம் ஆகியவற்றை மறப்போம்.


நல்ல விதை, நீர், சூரியன் செடிக்கு தேவை;

அன்பு, நேசம், நற்சிந்தனை நமக்கு தேவை.

நற்சிந்தனை உயர்வை தரும்,

உலகம் உன்னை உற்று நோக்கும்.




எண்ணம் தூய்மையாக, 

உண்மையாக இருக்கட்டும்;

உறுதியும் மனதில் கொண்டு 

இலக்கை அடைவோம் எளிதாக.

ஒளிமயமான எதிர்காலம் 

நம் கரம் பிடித்து நிற்கும்,

காலம் நம் நிலை உயர்த்தும்.


எண்ணத்தின் அமைதி, நம்பிக்கை 

ஏணி போல் ஏற்றும் நம்மை,

வாழ்க்கை வசந்தமாகும்.

எண்ணம் போல் வாழ்க்கை.


(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், விகே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மனிதர்களுக்குத்தான் மன அழுத்தம்... வாஸ்தவம்தான்.. அது என்ன காற்றுக்கு அழுத்தம்?

news

என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்வு... சவரனுக்கு ரூ.1,440 உயர்வு!

news

தலைநகர் சென்னையில்.. பெரம்பூரில் போட்டியிடுங்கள்... விஜய்க்கு தவெக நிர்வாகிகள் வேண்டுகோள்

news

நெருக்கடி நேரத்துல.. மண்டையைப் பிச்சுக்காதீங்க.. ஈஸியா முட்டைக் குழம்பு வச்சு அசத்துங்க..!

news

டி 20 உலகக் கோப்பை.. இந்தியாவை சிக்கல்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களேய்யா!

news

"நாளை உன் கண்கள் என்னைத்தான் தேடும்" .. (நீ மழை.. 4)

news

அத்தி வரதர் மார்ச் 01ம் தேதி மீண்டும் வெளியே வருகிறார்.. எந்த ஊரில் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்