- சி.குமரேஸ்வரி
எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை சிறக்கும்,
இனிமை மலர இதயம் மலரும்.
மனது நல்லதை மட்டுமே நினைக்கட்டும்,
பொறாமை, கோபம் ஆகியவற்றை மறப்போம்.
நல்ல விதை, நீர், சூரியன் செடிக்கு தேவை;
அன்பு, நேசம், நற்சிந்தனை நமக்கு தேவை.
நற்சிந்தனை உயர்வை தரும்,
உலகம் உன்னை உற்று நோக்கும்.

எண்ணம் தூய்மையாக,
உண்மையாக இருக்கட்டும்;
உறுதியும் மனதில் கொண்டு
இலக்கை அடைவோம் எளிதாக.
ஒளிமயமான எதிர்காலம்
நம் கரம் பிடித்து நிற்கும்,
காலம் நம் நிலை உயர்த்தும்.
ஏணி போல் ஏற்றும் நம்மை,
வாழ்க்கை வசந்தமாகும்.
எண்ணம் போல் வாழ்க்கை.
(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், விகே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரைணக்கு ஏற்பு
அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வு!
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
{{comments.comment}}