- மஞ்சுளா தேவி
சென்னை: "என்னடா செல்லங்களா... அதுக்குள்ள இவ்வளவு பெருசா வளர்ந்து விட்டீர்களா".... என்று ஆச்சரியப்பட்டு எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் பிள்ளைகளைப் பார்த்து.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளின் முதல் பிறந்தநாள் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் கடந்த வருடம் மிக சிறப்பாக திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே
தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பின்னர் நயன் விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களுக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே பதிவுத் திருமணம் ஆகிவிட்டது என விளக்கம் அளித்தனர்.
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என தெரியாமலேயே இருந்தது. ஆனால் ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன் - விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுடைய குழந்தைகளின் முழு பெயரை அறிவித்தனர். ஒரு குழந்தையின் பெயர் உயிர் ருத்ரனீல் என் சிவன் மற்றும் இன்னொரு குழந்தையின் பெயர் உலக் தெய்வக் என் சிவன் என தனது குழந்தையின் முழு பெயர்களை கூறினர்.
இந்த இரட்டைக் குழந்தைகளும் இப்போது தங்களது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். இதையொட்டி குழந்தைகளின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தங்களது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் என கூறியுள்ளனர் நயனும், விக்கியும். விக்னேஷ் சிவன் - நயன் தம்பதியின் குழந்தைகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்படம் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த அப்டேட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}