சென்னை : தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி, மாநிலத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் 'தமிழ்ப் புத்தாண்டு' குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
நேற்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், "தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். பொங்கலோடு சேர்த்து 'தமிழ்ப் புத்தாண்டு' வாழ்த்தையும் அவர் குறிப்பிட்டது தான் இப்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் புத்தாண்டு எப்போது என்பதில் இருவேறு கருத்துக்கள் பல தசாப்தங்களாக இருந்து வருகின்றன. பாரம்பரியமாகப் பெரும்பான்மையான மக்கள் சித்திரை 1-ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், 1921-ல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், 'தை முதல் நாளே' தமிழ்ப் புத்தாண்டு என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதன் அடிப்படையில், 2008-ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தை 1-ஐ புத்தாண்டாக அறிவித்து சட்டம் இயற்றியது. பின்னர் 2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, மீண்டும் சித்திரை 1-ஐ அதிகாரப்பூர்வ புத்தாண்டாக மாற்றியது.

தற்போது கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் இறங்கியுள்ள விஜய், தனது கட்சியின் கொள்கைகளில் திராவிடச் சிந்தனை மற்றும் தமிழ் தேசியம் ஆகிய இரண்டையும் கலந்து முன்வைத்து வருகிறார். தற்போது தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிப்பிட்டதன் மூலம், அவர் தமிழறிஞர்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் முன்னெடுக்கும் கருத்தியலோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது.
விஜய்யின் இந்த வாழ்த்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இதனை வரவேற்கும் நிலையில், சித்திரை 1-ஐ பின்பற்றுபவர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் இது குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். எது எப்படியோ, ஒரு பண்டிகை கால வாழ்த்துச் செய்தி தமிழகத்தின் அடையாள அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}