சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு உள்துறை அமைச்சகம் அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சி தொடக்கத்திலிருந்து 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொண்டு பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். அதேபோல் கட்சி அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்காக மாநாடு, பொதுக்குழு கூட்டம், புத்தக வெளியீடு, கட்சி ஓராண்டு விழா, பரந்தூர் விசிட் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்காக பொது இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே விஜய்க்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் கடந்த மாதம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்ட துப்பாக்கி ஏந்திய ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக விஜய்க்கு பாதுகாப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் விஜயின் அன்றாட நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்து அதற்கு தகுந்தாற் போல் பாதுகாப்பு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி
என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!
2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா
"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை
மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை
நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
{{comments.comment}}