சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு உள்துறை அமைச்சகம் அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சி தொடக்கத்திலிருந்து 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொண்டு பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். அதேபோல் கட்சி அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்காக மாநாடு, பொதுக்குழு கூட்டம், புத்தக வெளியீடு, கட்சி ஓராண்டு விழா, பரந்தூர் விசிட் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்காக பொது இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே விஜய்க்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் கடந்த மாதம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்ட துப்பாக்கி ஏந்திய ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக விஜய்க்கு பாதுகாப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் விஜயின் அன்றாட நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்து அதற்கு தகுந்தாற் போல் பாதுகாப்பு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாற்றம்!
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்
முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது
நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
{{comments.comment}}