உன்னை தினம் தேடும் தலைவன்.. விஜயகாந்த் மீது காதல் வந்த அந்த ஒரு நிமிடம்.. பிரேமலதா சொன்ன ரகசியம்!

Dec 22, 2024,04:45 PM IST

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பற்றிய பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய பல பேட்டிகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜயகாந்த் உடன் தனக்கு எப்படி திருமணம் நடந்தது, பெண் பார்க்க வந்த அனுபவம், விஜயகாந்த் உடனான திருமண வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு விஜயகாந்த் மீது முதல் முறையாக எப்போது காதல் வந்தது என்ற சுவாரஸ்யமான மலரும் நினைவுகளை பிரேமலதா தற்போது பகிர்ந்துள்ளார்.


டிசம்பர் 28ம் தேதியுடன் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதனால் விஜயகாந்த்தை பெருமைப்படுத்தும் வகையில் அவர் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை தேர்வு செய்து 13 மணி நேரத்தில் பாடும் சாதனை நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடத்தப்பட்டது.  தி.நகர் பிட்டி தியாகராயர் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஜிஜி கவிதாவின் இன்னிசை மழை குழு வழங்கிய இந்த நிகழ்ச்சியில்150 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோமதி ஞானப்பிரகாசம் தலைமையிலான குழு செய்திருந்தது.




இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் நடித்த சில பாடல்களை பிரேமலதா விஜயகாந்த்தும் பாடினார். பல பாடல்களை பாடும் போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கவும் செய்தார். இந்த விழாவில் பேசிய பிரேமலதா பல மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.


பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது:  விஜயகாந்த் நடித்த பாடல்களை எப்போது கேட்டாலும் என்னுடைய கல்லூரி காலத்திற்கே சென்று விடுவேன். விஜயகாந்த் நடித்த தூரத்து இடி முழக்கம், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் அவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் கண்டு ரசித்திருக்கிறேன்.




நான் கல்லூரியில் படிக்கும் போது, பொங்கல் லீவுக்கு ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு சென்ற போது என் அப்பா வேலை செய்த கிராமத்து பின்னணியில் தியேட்டருக்கு சென்று உழவன் மகன் படம் பார்த்தேன். அதில் வரும், "உன்னை தினம் தேடும் தலைவன்" பாடலை கேட்டு தான் அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. ஒரு நடிகராக திரையில் நான் ரசித்த நடிகரை, கடவுள் எனக்கு கணவராகவும் தந்தார். இப்போதும் உன்னை தினம் தேடும் தலைவன் பாடல், ஆடியில சேதி சொல்லி ஆகிய பாடல்களை கேட்கும் போது என்னும் கல்லூரி கால நினைவுகளுக்கு சென்று விடுவேன் என தெரிவித்துள்ளார்.


விஜயகாந்த்-பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் திருமணம் முழுமுழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு இப்படி காதல் சுவாரஸ்ய நிகழ்வுகள் இருக்கும் என்பது இதுவரை யாரும் அறியாத ஒரு விஷயமாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்