சென்னை; வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் நாளை தவெக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நள்ளிரவு 2 மணியளவில் எம்பிக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டும் இன்றி இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டும் வருகிறது.
இத்தகைய எதிர்ப்புகள் அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து வக்பு வாரிய திருத்த மேசாதா நிறைவேறி இருக்கும் நிலையில், தவெக தரப்பில் நாளை போரட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}