சென்னை: சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட படையெடுத்து வருவதால் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு, சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரு் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் அதிக அளவில் கிளம்பிச் சென்று வருகின்றனர். நேற்று முதலே கூட்டம் அலை மோத ஆரம்பித்து விட்டது.
சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நேற்று மாலை முதலே அதிகரித்துக் காணப்படுகிறது. சாலை மார்க்கமாக பல்வேறு வாகனங்களிலும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மக்களின் வசதிக்காக 1250 சிறப்புப் பேருந்துகளையும் இயக்குகிறது. இதனால் மக்கள் சவுகரியமாக சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வழக்கமான முன்பதிவு இடங்கள் நிரம்பிய நிலையில் பொதுப் பெட்டிகளிலும் மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். இதனால் பொதுப் பெட்டிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. சற்று அவுசகரியமாக இருந்தாலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஊர்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதேபோல விமான பயணத்திற்கும் கூட மக்கள் அதிக அளவில் வருவதால் விமான நிலையத்திலும் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. கூட்ட நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் நிர்வாகமும் அதிக அளவிலான ரயில்களை இயக்குகிறது
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
{{comments.comment}}