பெங்களூரு: பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டினார்.
3வது நாளான இன்று இந்தியாவுக்கு சற்றே ஆதரவு அளிக்கும் வகையில் விராட் கோலியின் அரை சதம் வந்தமைந்தது. கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி தனது முதல் அரை சதத்தை அடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் கடைசியாக அரை சதம் போட்டிருந்தார் விராட் கோலி. அதில் 76 ரன்களை எடுத்திருந்தார் விராட் கோலி.

இந்த நிலைியல் இன்று விராட் கோலி மேலும் ஒரு புதிய மைல்கல்லையும் எட்டினார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் 9000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார். அவரும் சர்பிராஸ் கானும் சேர்ந்து 100 ரன்களை சேர்த்து இந்திய அணிக்கு சற்று ஸ்திரம் கொடுத்தனர். சர்பிராஸ் கானும் இன்று அரை சதம் எடுத்தார்.
முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 46 ரன்களுக்கு இழந்திருந்தது. பதிலுக்கு நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை எடுத்தது. ரச்சின் ரவீந்திரா சதமடித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோர் வலுப்பெற உதவினார். அவர் எடுத்த ரன்கள் 134 ரன்களாகும். தேவான் கான்வே 91 ரன்களைக் குவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}